மயங்க் யாதவ் என்கிட்ட உண்மைய சொல்லிட்டாரு.. விளையாடாத காரணம் இதுதான்.. ஆஸிக்கு போவாரா? – மென்டர் தேவேந்திரா வெளியிட்ட தகவல்

0
272
Mayank

தற்போது இந்திய கிரிக்கெட்டில் தனது அதிவேகத்தால் மயங்க் யாதவ் எல்லோரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து துலீப் டிராபி வரையில் விளையாடாமல் இருக்கும் காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் ஏன் விளையாடவில்லை? என அவருடைய மென்டர் தேவேந்திரா கூறியிருக்கிறார்.

தற்போது டெல்லியில் முதல்முறையாக டெல்லி பிரிமியர் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இதிலும் டெல்லி வீரரான மயங்க் யாதவ் விளையாடவில்லை. இப்படி அவர் சிவப்பு பந்து வெள்ளை பந்து என உள்நாட்டில் நடைபெறும் இரண்டு தொடர்களிலும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தற்பொழுது இதற்கான காரணத்தை அவருடைய மென்டர் தேவேந்திரா வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

மயங்க் யாதவ் ஸ்பெஷல்

மயங்க் யாதவ் அதிவேகமாக பந்து வீசுவது மட்டுமே அவருடைய சிறப்பு தகுதியாக இல்லை. அவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசினாலும் கூட அவருடைய கட்டுப்பாடு எந்த இடத்திலும் தவறுவதில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட ஆடுகளத்தில் எந்த இடத்தில் பந்து வீசினால் சரியாக இருக்குமோ அந்த இடத்தில் தொடர்ந்து சரியாக வீசுகிறார்.

இப்படி வேகமும் கட்டுப்பாடும் ஒரு வீரரிடம் இருப்பது என்பது உலகக் கிரிக்கெட்டில் அரிதானது. இதன் காரணமாகவே இவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகவும் பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த நினைக்கிறது. அதே சமயத்தில் இவர் பந்து வீசும் ஆக்சன் காரணமாக உடலில் ஒரு பகுதிக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு காயம் ஏற்படுகிறது. எனவே இவர் தற்பொழுது தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் மறுவாழ்விலும் பயிற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்.

- Advertisement -

விளையாடாத காரணம் என்ன?

இதுகுறித்து அவருடைய மென்டராக இருக்கும் தேவேந்திரா கூறும் பொழுது “இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் காலையில் அவர் எப்பொழுதும் போல பந்து வீசவைக்கப்படுகிறார். தொடர்ந்து அவருக்கு காயங்களில் இருந்து மீண்டு வருவதற்கான மறுவாழ்வு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியவை கொடுக்கப்படுகிறது. பிறகு மீண்டும் வலைகளில் அவர் தன்னுடைய பந்துவீச்சு பயிற்சியை தொடர்கிறார். இது அவருக்கு தினம் தோறும் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது”

இதையும் படிங்க : ஷர்துல வச்சு தோனி பண்ணின கேப்டன்சிய மறக்கவே முடியாது.. ஆனா ரோகித் வேற மாதிரி – ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல்

“அவர் தினமும் 8 முதல் 10 ஓவர்கள் வலையில் வீசுகிறார். அவர் ஏன் துலீப் டிராபி விளையாட தேர்வு செய்யப்படவில்லை என நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘சார் இப்பொழுது என்னால் அவ்வளவு தூரம் பந்து வீச முடியாது என்றும் அதனால் அந்த தொடரில் விளையாட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள். இப்போது என்னுடைய உடலில் அதிக சுமை இருக்கின்ற காரணத்தினால், கொஞ்ச காலத்திற்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன்’ என்று கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -