இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்ற கேப்டன்களாக கபில்தேவ், மகேந்திர சிங் தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் இருக்கிறார்கள். இதில் மகேந்திர சிங் தோனி மற்றும் ரோகித் சர்மா கேப்டன்சி எப்படி ஆனது என ஹர்பஜன்சிங் கூறியிருக்கிறார்.
ஹர்பஜன்சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா கேப்டன்சியில் விளையாடி இருக்கிறார். அதே சமயத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். எனவே இவர்கள் இருவரும் கேப்டன் பொறுப்பில் எப்படி ஆனவர்கள்? என்பது குறித்து கருத்து கூறும் அளவுக்கு தனிப்பட்ட அனுபவம் இவரிடம் இருக்கிறது.
தோனி – ரோகித் சர்மா
தோனியை பற்றி ஹர்திக் பாண்டியா கூறியிருந்த பொழுது அவர் எப்பொழுதுமே வீரர்கள் தவறு செய்து தாமாகவே கற்றுக் கொள்வதற்கு இடம் கொடுப்பார் என்று கூறியிருந்தார். உலக அளவில் சிறந்த பயிற்சியாளர்கள் அனைவருமே வீரர்கள் சொந்த தவறில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் ரோகித் சர்மா ஒரு பந்துவீச்சாளருக்கு என்ன தேவை தேவையில்லை என்பதை தாமாகவே சென்று பேசி புரிய வைத்து விளையாட விடக் கூடியவர். பெரும்பாலும் ரோகித் சர்மா ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் தானே பீல்டிங்கை செட் செய்து கொடுத்து விடுவார். ஆனால் தோனி இப்படி கிடையாது.
ஷர்துல் தாக்கூர் சம்பவம்
தோனி மற்றும் ரோகித் சர்மா கேப்டன்சியில் இருக்கும் வித்தியாசம் பற்றி கூறியிருக்கும் ஹர்பஜன்சிங் “இருவருமே கேப்டன் பொறுப்பில் மிகவும் வித்தியாசமானவர்கள். தோனி வீரர்கள் தவறு செய்யவிட்டு கற்றுக் கொள்ள அனுமதிக்க கூடியவர். அவர் அதிகம் வீரர்களிடம் பேசவே மாட்டார். அதே சமயத்தில் ரோகித் சர்மா வீரர்களுக்கு என்ன தேவை தேவையில்லை என்று தோள் மேல் கை போட்டு பேசி புரிய வைக்க கூடியவர்”
“ஒரு போட்டியில் நான் ஃபைன் லெக்கில் பில்டிங் செய்து கொண்டிருந்தேன் தோனி கீபிங்கில் இருந்தார். அந்த நேரத்தில் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை பவுண்டரி அடித்தார். மீண்டும் ஷர்துல் தாக்கூர் அதே லென்த்தில் பந்தை வீச மறுபடியும் பவுடர் அடித்தார்”
“நான் சென்று தோனியிடம் லென்த்தை மாற்றி வீசும்படி சொல்லச் சொன்னேன். அதற்கு தோனி என்னிடம் ‘பாஜி நான் இப்பொழுது லென்த்தை மாற்றி வீசு என்று சொன்னால், அவர் செய்யும் தவறை அவரால் கற்றுக் கொண்டு திருத்திக் கொள்ள முடியாது. எனவே அவரே அவருடைய தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளட்டும்’ என்று கூறினார். தோனி இப்படி வீரர்கள் தாங்களே தவறு செய்து கற்றுக்கொள்ள அனுமதிக்க கூடியவர்”
இதையும் படிங்க : ஜடேஜாவுக்காக நான் ஒதுக்கப்படறேனா.. அந்த அரசியல்தான் சரியில்ல.. பொறாமை கிடையாது – அஸ்வின் பேச்சு
“ரோகித் மிகவும் வித்தியாசமானவர். அவர் வீரர்களிடம் சென்று பேசுவார். அவர் உங்கள் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு உங்களுக்கு என்ன தேவை என்பதை கூறுவார். மேலும் உங்களால் செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கையை உங்களுக்கு கொடுப்பார்” என்று கூறியிருக்கிறார்.