156 கி.மீ வீசுவேனு ஐபிஎல்லதான் தெரியும்.. லக்னோ டீம்ல ஒருநாள் அது நடந்தது – மயங்க் யாதவ் பேட்டி

0
166
Mayank

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் மயங்க் யாதவ் தன்னால் விரைவாக பந்து வீச முடியும் என்பது ஐபிஎல் தொடரில்தான் தெரியும் என கூறியிருக்கிறார்.

22 வயதான மயங்க் யாதவ் உடலின் ஒரு பக்கத்தில் ஏற்பட்டிருந்த பக்க காயத்தின் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வில் இருந்து வந்தால். இந்த நிலையில் முழுமையாக குணமடைந்து பந்து வீசும் நிலைக்கு வந்து இருக்கும் அவரை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

2024 ஐபிஎல் தொடர்

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு வாங்கப்பட்ட மயங்க் யாதவுக்கு அந்த வருடம் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதற்கு அடுத்த வருடத்தில் அவர் விளையாட தயாராக இருந்த பொழுது பயிற்சியில் காயம் ஏற்பட்டு விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு விளையாடும் வாய்ப்பு அவருக்கு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிக்கு எதிராக பந்துவீச்சில் தனி ஒரு வீரராக லக்னோ அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தார். இதில் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி ஆச்சரியப்படுத்தினார். மேலும் இவ்வளவு வேகத்தில் அவர் துல்லியம் தவறாதது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

எனக்கு இதுவெல்லாம் தெரியாது

“நான் இவ்வளவு விரைவாக பந்து வீசுவேன் என்பது ஐபிஎல் தொடருக்கு முன்பாக எனக்கு தெரியாது. எல்லோரும் வீசும் இயல்பான வேகத்தில் நானும் பந்து வீசுவேன் என்றே நினைத்து வந்திருந்தேன். சோனட் கிளப்பின் பயிற்சியாளர் தேவேந்திர சர்மா நான் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவதாக கூறினார். ஆனால்நான் அதையெல்லாம் நம்பவில்லை”

இதையும் படிங்க : இந்தியா முதல் நியூசி அணி வரை.. சாதித்து காட்டிய ஜெயசூர்யா.. இலங்கை கிரிக்கெட் சிறப்பு முடிவு

“இந்த நிலையில் நான் லக்னோ மணிக்கு முதல்முறையாக பயிற்சி அமர்வில் பந்து வீசினேன். அப்போது அணியின் துணை ஊழியர்கள் நான் எவ்வளவு வேகத்தில் பந்து வீசுகிறேன் என்று யூகிக்க சொன்னார்கள். நான் 140 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கலாம் என்று கூறினேன். ஆனால் அவர்கள் நான் 149, 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதாக கூறினார்கள். அப்போதுதான் நான் இவ்வளவு வேகமாக பந்து வீச முடியும் என்பதையே உணர்ந்தேன். தற்போது இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -