மகேந்திர சிங் தோனி இந்த விஷயத்தை செய்வதில் கில்லாடி ; சிஎஸ்கே உறுதியாக பிளே ஆப்ஸ் போகும் – ரவி சாஸ்திரி உறுதி!

0
1320
Dhoni

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் வெறும் 4 ஆட்டங்களை மட்டுமே வென்று ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தனது தனிப்பட்ட செயல்பாட்டை பதிவு செய்தது!

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரகானே, ஸ்டோக்ஸ் மற்றும் ஜெமிசன் ஆகியோரை வாங்கி புதிய ஒரு அணிக்கலவையை உருவாக்கியது!

- Advertisement -

தற்பொழுது நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு ஆட்டங்களை வென்றும், ஒரு ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போகவும் 13 புள்ளிகளை எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தை வென்றால் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கவே செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

மகேந்திர சிங் தோனி எப்படியான அணி கலவைகளை உருவாக்குகிறார் என்று பேசி உள்ள ரவி சாஸ்திரி ” அவர் காம்பினேஷன்களை உருவாக்குவதில் மாஸ்டர். தனது உள்ளுணர்வின்படி இப்படி செய்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு சிறப்பாக செயல்படாத ஒரு பையனை நம்பி இந்த ஆண்டு தொடர்ந்து போகின்ற தொலைநோக்குப் பார்வை அவரிடம் இருக்கிறது. கடந்த ஆண்டு அவர்களுக்கு அந்த நம்பிக்கையை அளித்து, முன்னோக்கி யோசித்து ஒருசில வீரர்களுடன் அவர் வேலை செய்திருப்பார்.

இந்த விஷயத்தில் அவர் செயல்பாடு குறித்து நான் ஆச்சரியம் அடைய மாட்டேன். நான் அங்கிருந்து பார்க்கவில்லை ஆனால் நிச்சயமாக அவர் இந்தப் பாணியில்தான் செயல்படுகிறார் என்று கூறுவேன்.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்க்கும் பொழுது பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி என்று தெரிகிறது. அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு வரும்பொழுது ஆபத்தானவர்களாக இருப்பார்கள். ப்ளே ஆப் சுற்றில் இரண்டு ஆட்டங்கள் சென்னையில் நடக்கிறது. இந்த அணி நீண்ட தூரம் போகின்ற அணி!” என்று கூறியிருக்கிறார்!