திலக்கு வர்மாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் .. ஆசியா கேம்ஸ் அணியில் நீக்க வாய்ப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி.!

0
6004
Tilak

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு, 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த வாரத்தில் இந்திய தேர்வுக்குழு அறிவித்திருந்தது!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்ட வீரர்களில் யாரும் பெரிய ஆச்சரியத்தை தரக்கூடிய அளவுக்கு இல்லை. ஏனென்றால் அறிவிக்கப்பட்ட வீரர்கள் எல்லோரும் எதிர்பார்த்த வீரர்களாகவே இருந்தார்கள்.

- Advertisement -

இந்த அணியில் காயத்திலிருந்து திரும்பி வந்த பேட்ஸ்மேன்கள் கேஎல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் இடம் பெற்று இருந்தார்கள். மேலும் காயத்தில் இருந்து திரும்பி வந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெற்று இருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சுற்று முதல் போட்டியின் போது, காயத்தில் இருந்து திரும்ப வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதே காயத்தின் காரணமாக, போட்டிக்கு சில நிமிடங்கள் இருந்த பொழுது அணியில் இருந்து விலகினார்.

இதற்கடுத்து பிளேயிங் லெவனில் இடம் பெற்ற கே எல் ராகுல் அவரது உடல் தகுதி எந்த அளவில் இருக்கிறது? என்று பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்து வெளிப்படுத்தி இருக்கிறார். இது இந்தியாவின் நிர்வாகத்திற்கு நல்ல செய்தி.

- Advertisement -

தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு சந்தேகம் நிலவுகிறது. இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் சில அதிரடி முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிய வருகிறது.

இந்தியாவில் உலகக்கோப்பை நடக்க இருக்கும் நேரத்திற்கு கொஞ்சம் முன்பாக சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. அதற்கு இந்தியா தரப்பில் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகள் அனுப்பப்படுகின்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பப்படும் ஆண்கள் கிரிக்கெட் இந்திய அணிக்கு ருதுராஜ் கேப்டனாக இருக்கிறார். இந்த அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆசியக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் திலக் வர்மாவும் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி சந்தேகத்தை உண்டாக்கி இருக்கின்ற காரணத்தினால், திலக் வர்மாவை ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கி, உலகக்கோப்பை இந்திய அணியோடு தொடர்ந்து வைத்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வருகிறது.

தற்பொழுது பேக்கப் வீரராக கொண்டு வந்து, தேவைப்பட்டால் அணிக்குள் கொண்டு வருவதற்கான யோசனைகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. பலரும் எதிர்பார்த்தது போலவே திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது!