விளையாடும் முன்பே இந்தியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ரோகித் சர்மா கொடுத்த மாஸ் அப்டேட்!

0
2222
Rohit

13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில், டாஸ் நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்பொழுது வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் அவர் முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தும் இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் இந்திய அணி கடந்த 5 போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது.

- Advertisement -

மும்பையில் பகல் இரவு ஆட்டங்களில் முதலில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானது ஆகும். ஏனென்றால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது மிக முக்கியமான ஒன்று.

பகலில் முதலில் பந்து வீசும் அணிக்கு பெரிதாக ஸ்விங் ஏதும் கிடைக்காது. மேலும் ரன்கள் அடிப்பதற்கு எளிதாகவும் இருக்கும். அதே சமயத்தில் இரண்டாவது பந்து வீசும் பொழுது முதல் 20 ஓவர் களுக்கு பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதன் காரணமாக டாஸ் மும்பையில் மிகவும் முக்கியமான ஒன்று.

தற்பொழுது இந்திய அணி மிக முக்கியமான உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்திருக்கிறது. போட்டிக்கு முன்பாகவே இது இந்திய அணியின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் நிர்வாகத்தையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேசும்பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். இது பேட்டிங் செய்ய மிகவும் நல்ல விக்கெட். மேலும் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கும் என்று தெரிகிறது. எனவே நாங்கள் எதைச் செய்தாலும் சரியாக செய்ய வேண்டும். நியூசிலாந்து நிலையாக சரியாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு அணி. நாங்கள் ஏற்கனவே விளையாடிய அதே அணியுடன் விளையாடுகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!

நியூசிலாந்து அணியும் இலங்கைக்கு எதிராக களம் இறக்கிய அதே அணியை களம் இறக்கி இருக்கிறது. தற்பொழுது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரைஇறுதி போட்டி இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது!