நடப்பு ஐபிஎல் தொடரின் 40வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடுகின்றன.
இதில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த லக்னோ அணிக்கு கேப்டன் ரிஷப் பண்டின் தவறான முடிவால் தற்போது அணி சிக்கலில் மாட்டியிருக்கிறது.
லக்னோ டெல்லி மோதல்
லக்னோவில் உள்ள அடல் பிகாரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க, லக்னோ அணி முதலில் பேட்டிங் களம் இறங்கியது. வழக்கம் போலவே இந்த முறையும் லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் எய்டன் மார்க்ரம் மற்றும் மிச்சல் மார்ஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.6 ஓவர்களில் 87 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய மார்க்ரம் சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டம் இழந்த பிறகு தற்போதைய ஐபிஎல் தொடரின் அபாயகரமான பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். குல்தீப் யாதவின் 11 வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகள் அடித்த பூரன் பன்னிரண்டாவது ஓவரில் ஸ்டார்க்கை எதிர்கொண்டார். ஸ்டார்க் வீசிய இரண்டாவது மெதுவான பந்தை எதிர்பாராத பூரான் அதனை வேகமாக அடிக்க முயற்சித்து ஸ்டம்ப்புகள் சிதற போல்ட் ஆகி வெளியேறினார்.
கேப்டன் பண்டின் தவறான முடிவு
அவருக்குப் பிறகு நான்காவது வரிசையில் களமிறங்கும் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்காமல் பினிஷர் ரோலில் விளையாடி வந்த அப்துல் சமாத் களம் இறக்கப்பட்டார். அதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த லக்னோ அணிக்கு அப்துல் சமாத் 8 பந்துகளை வீணடித்து வெறும் 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க:‘தல’ இருக்கும் போது பயம் ஏன்.. 2010ல் நடந்த விஷயத்தை மறக்காதீங்க.. அது மாதிரி இப்பவும் நடக்கும்.. சிஎஸ்கே சிஇஓ நம்பிக்கை
இடையில் மற்றொரு தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் 45 ரன்னில் முகேஷ் குமார் பந்துவீச்சிலேயே ஆட்டம் இழக்க, ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்டின் தவறான முடிவால் தற்போது 16 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. நான்காவது இடத்தில் களம் இறங்க வேண்டிய ரிஷப் பண்ட் ஸ்டார்க் பந்து வீசுகிறார் என்பதற்காக களம் இறங்கவில்லையா? அல்லது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக களம் இறங்கவில்லையா? என்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.