இந்தியா விட்டதை.. தென் ஆப்பிரிக்கா அணி செய்யும்.. ஆஸியை வீழ்த்துவோம் காரணம் இதுதான் – நோர்கியா சவால்

0
107
Nortje

இந்த முறை இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி சாம்பியன் ஆகும் என அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியா கூறியிருக்கிறார்.

இதுவரையில் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள்கள் முழுமையாக முடிவடைந்து இருக்கின்றன. இரண்டு முறையும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கையில் இருந்ததை விட்ட இந்தியா

இந்த முறை மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தொகுதி பெறக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு முதலில் இந்திய அணிக்கு இருந்தது. ஆனால் சொந்த மண்ணில் யாரும் எதிர்பார்க்காத விதமாக மூன்று டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி இடம் தோற்று வாய்ப்பை இழந்தது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று மேலும் தோற்றதால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை விட்டு வெளியேறியது. மேலும் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15ஆம் தேதி வரையில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

அன்றிச் நோர்க்கியா சவால்

இதுகுறித்து அன்றிச் நோர்க்கியா கூறும்பொழுது ” எங்களுக்கு எப்பொழுதும் லண்டன் லார்ட்ஸ் மைதானம் சிறப்பானதாக இருந்து வந்திருக்கிறது. கடந்த காலங்களில் எங்களுடைய அணி இந்த மைதானத்தில் நல்ல முறையில் விளையாடியிருக்கிறது. இது மிகவும் உற்சாகமான நேரம். எங்களுக்கு இப்பொழுது ஒரு பெரிய வாய்ப்பு சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு கிடைத்திருக்கிறது. இதில் நாங்கள் வென்று வர முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்”

இதையும் படிங்க : அணி மாறும் விவகாரம்.. ஜெய்ஸ்வால் எடுத்த முக்கிய முடிவு.. தலைகீழாக நடந்த விஷயம்.. வெளியான தகவல்கள்

“கடந்த சில வருடங்களாக எங்களுடைய வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். உங்களுடைய பயிற்சியாளர் அணிக்கு நல்ல பாசிட்டிவான ஆற்றலை கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் பல வீரர்கள் பல மாதிரியான திறமைகளை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இது இறுதியாக அணியை வெற்றி பெற வைக்கும் நோக்கமாகவே இருந்திருக்கிறது. நாள் முடியும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் இதுதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -