பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வித்தியாசமான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.
விராட் கோலி கடைசியாக இந்தியாவின் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் அடித்தவராக வந்திருந்தார். அந்த உலகக் கோப்பையை இந்திய அணி தோற்ற பிறகு மீண்டும் அவருடைய பேட்டிங் ஃபார்ம் சரியா ஆரம்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் இரண்டு இன்னிங்ஸ் சோகம்
தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி வழக்கம் போல் வெளியில் செல்லும் பந்தை விளையாட சென்று விக்கெட் கீப்பர் இடம் கொடுத்து ஆட்டம் இழந்து வெறுப்பேற்றினார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பந்து பேட்டில் உரசி இருந்த பொழுதும் நடுவர் எல்பிடபிள்யு கொடுத்ததும் ரிவ்யூ கேட்காமல் விராட் கோலி உடனடியாக வெளியேறிவிட்டார். இது இந்திய ரசிகர்களை தாண்டி இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவையும் கடுப்பாகியது. மேலும் இன்று சமூக வலைதளம் முழுக்க அதுவே செய்தியாக இருக்கிறது.
சச்சின் போலவே விராட் கோலியும் இருக்கிறார்
இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “விராட் கோலி நேற்று அதை மோசமாக உணர்ந்தார். பந்து பேட்டில் பட்டதாக அவர் உணரவில்லை. பந்து ஸ்டெம்பை தாக்குமா என்று கில்லிடம் தெரிந்து கொள்ள விரும்பினார். கில் ரிவ்யூ செய்யலாம் என்று கூறிய போதிலும் விராட் கோலி மற்ற வீரர்களுக்கு ரிவியூ இருக்கட்டும் என்று தன்னலமற்று வெளியேறினார்”
இதையும் படிங்க : 638 நாட்கள் கழித்து ரிஷப் பண்ட் மாஸ்.. தொடர்ந்து 4வது முறையாக கில் அசத்தல்.. 432 ரன் கெத்து காட்டும் இந்திய அணி
“சச்சினைப் போலவே விராட் கோலியும் இந்தியாவில் பேட்டிங் செய்வதை விரும்பவில்லை. அவர் வெளிநாடுகளில் பேட்டிங் செய்வது அதிகம் விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி விளையாடிய பொழுது இந்தியாவின் சிறந்த பேட்டராக அவர் இருந்தார். இந்தியாவை விட வெளிநாடுகளில் சிறந்த பேட்டராக இருப்பது நல்ல விஷயம்தான்” என்று கூறியிருக்கிறார்.