“ரோகித் கோலிய விடுங்க.. உங்க கேம் சேஞ்சர் இவர்தான்!” – இயான் மோர்கன் அசத்தல் பேச்சு!

0
522
Virat

இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் மக்களால் நிரம்பி வழிய ஆரம்பித்து இருக்கிறது. வெளியில் இருந்து 40 ஆயிரம் ரசிகர்கள் அகமதாபாத் மைதானத்தை நோக்கி குவிந்திருக்கிறார்கள்.

அகமதாபாத்தை சுற்றியுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன. இதன் காரணமாக மருத்துவமனைகளில் பரிசோதனை என்கின்ற பெயரில் ரசிகர்கள் தங்கும் வினோதம் அரங்கேறி வருகிறது.

- Advertisement -

மேலும் சுற்றியுள்ள பொழுதுபோக்கு இடங்களிலும் ரசிகர்கள் தங்குகிறார்கள். இவை எல்லாமே இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் ஒரு போட்டிக்காக நடக்கின்ற விஷயம். இதன் காரணமாகத்தான் எல்லா போட்டிகளுக்குமான முக்கிய முதல் போட்டியாக இந்த போட்டி இருந்து வருகிறது.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் சரியான பேட்டி யூனிட் சரியான பவுலிங் யூனிட் என்று மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் முகமது சமி போன்ற ஒருவர் வெளியில் இருக்கும் அளவுக்கு பென்ஞ் வலிமை மிகச் சிறப்பாக இருக்கிறது.

நாளுக்கு நாள் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு நம்பிக்கையாக மாறி வருகிறது. இது இந்திய தரப்பில் மட்டும் இல்லாது வெளிதரப்பில் இருந்தும் கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்தியா முதலில் விளையாடிய இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வித்தியாசமான முறையில் வீழ்த்தியது. இரண்டு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் வெளியே வந்து அணியை முன்னே கொண்டு சென்றார்கள்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் பும்ரா வெளிப்படுத்திய பந்துவீச்சு மிக புத்திசாலித்தனமாக இருந்தது. அப்படி ஒரு ஆடுகளத்தில் 40 ரன்கள் குறைவாக கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதுகுறித்து 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் இயான் மோர்கன் கூறும்பொழுது “இந்தியாவின் பந்துவீச்சு யூனிட்டை நான் யாரையும் விட மிக வலிமையான ஒன்றாக இருப்பதாக பார்க்கிறேன். மிகச் சரியான நேரத்தில் வந்து பும்ரா இந்திய பவுலிங் யூனிட்டில் சேர்ந்திருக்கிறார். அவர் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக இங்கிலாந்து டப்ளினில் விளையாடும் பொழுது, தனது வழியை எளிதாக்கி உலகக் கோப்பை மீது ஒரு கண் வைத்தார்.

அவர் ஒரு கேம் சேஞ்சர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அழுத்தத்தை உருவாக்கி, பல்வேறு கட்டங்களில் மொத்தமாக நான்கு விக்கெட் கைப்பற்றினார். அவர் இன்றைய போட்டியில் இருதரப்பிலுமே கேம் சேஞ்சராக இருப்பார். பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் எதுவும் இல்லை.

இந்திய அணியின் சமநிலையை நான் பார்க்கிறேன். ஜடேஜா, சர்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறங்கக்கூடிய காரணத்தினால், ஹர்திக் பாண்டியாவும் மிகச் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!