ஜெய்ஸ்வாலுக்கு வேலை செய்வதற்காகவே எங்க சப்போர்ட் ஸ்டாப்சை பாராட்டணும் – சஞ்சு சாம்சன்!

0
3108
Sanjusamson

இன்று ஐபிஎல் 16வது சீசனில் 37வது போட்டியில் ராஜஸ்தான் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன!

டாசை வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை களமிறக்க, துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 43 பந்தில் 77 ரன்கள் குவிக்க, ராஜஸ்தான் மைதானத்தில் அதிகபட்ச ரன்களாக 202 ரன்களை பதிவு செய்தது ராஜஸ்தான்!

- Advertisement -

பெரிய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதனால் முடிவும் சிறப்பாக அமையவில்லை.

தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஆறு விக்கட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுக்க முடிந்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கும், மூன்றாவது இடத்தில் இருந்து ராஜஸ்தான் முதல் இடத்திற்கும் முன்னேறியது!

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ” இது அணிக்கு கிடைத்த வெற்றி மற்றும் இந்த வெற்றி டக் அவுட் மிகவும் எதிர்பார்த்த விரும்பிய ஒரு வெற்றி. இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் படிக்கல் மற்றும் ஜுரல் ஆகியோர் பேட்டிங் செய்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அட்டாக் அட்டாக் என்று அட்டாக் செய்ய நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஊக்குவிப்போம்.

அகாடமியில் மிகவும் கடினமாக உழைக்கும் ஜெய்ஸ்வால் போன்ற ஒரு வீரருக்கு வேலை செய்வதற்காகவே எங்கள் அணி ஊழியர்களை பாராட்ட வேண்டும். இதற்கான பெருமை அவர்களுக்கானது. ஜெய்ஸ்வால் வெற்றிக்குப் பின்னால் கடினமான மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அவர் விளையாடும் விதம் பெருமையாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!