“குறிப்பிட்ட இரண்டு விஷயத்துல கோலி மட்டும்தான் பெஸ்ட்.. அவர மாதிரி யாரையும் நான் பாக்கல!” – பாப் டு பிளிசிஸ் மனம் திறந்த பேச்சு!

0
2174
Faf

தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் விராட் கோலி ஈடு இணையற்ற தனி வீரராக ஜொலித்து வருகிறார். பேட்டிங்கில் அவர் கொண்டிருக்கும் சாதனைகளை தவிர்த்து, அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் கள நடவடிக்கைகள் அவருக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

முக்கியமாக விராட் கோலி உடல் தகுதிக்கான அடையாளமாகப் பல இளைஞர்களால் பார்க்கப்படுகிறார். மேலும் உலக அளவில் கிரிக்கெட்டுக்குள் வரக்கூடிய வீரர்கள், உடல் தகுதிக்கு விராட் கோலியை அளவுகோலாக எடுத்துக்கொள்கிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது விராட் கோலி சிறந்த வீரர் என்கின்ற இடத்தில் இருந்து கிரேட் என்ற அளவிற்கு உயர்ந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் விளையாடும் காலத்திலேயே இதுவரை அவரைப் போல் யாரும் கிடையாது என்கின்ற கருத்துக்கள் நிறைய வீரர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடினமான போட்டியில், இலக்கை துரத்துவதற்கு தன்னுடைய வழக்கமான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு எல்லாமே ஏறுமுகத்தில் இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அவருடன் இணைந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் விராட் கோலி பற்றி மனம் திறந்து பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி குறித்து அவர் கூறும் பொழுது “கிரிக்கெட் வரலாற்றில் ரன்னை துரத்துவதில் விராட் கோலி தான் தலை சிறந்தவர். விராட் கோலியின் தனித்துவமான குணங்கள் மற்றும் விளையாட்டின் மீதான அவரது பசி, திறந்து வழங்குவதற்காக தொடர்ந்து பாடுபடும் அவருடைய அர்ப்பணிப்புதான் அவரை உயர்த்துகிறது.

விராட் கோலியை விட மனவலிமையில் சிறந்த ஒரு நபரை நான் இதுவரையில் பார்த்தது கிடையாது. அவர் தன்னுடைய மேன்மைக்காக எப்பொழுதும் தொடர்ந்து உழைத்து வருகிறார். அவருடைய செயல்பாடுகள் மற்றவர்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு ஊக்கம் அளிக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!