“கேஎல்.ராகுல் ஸ்பெஷல்.. சந்தோஷப்பட முடியாத மாதிரி பண்ணிட்டாங்க..!” – சச்சின் வெளிப்படையான விமர்சனம்!

0
363
Sachin

தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன.

இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தென் ஆப்பிரிக்க நாட்டில் மோதிக் கொள்ளும் டெஸ்ட் போட்டி மிகவும் சுவாரசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு தன் அணியின் முக்கிய விக்கெட் அனைத்தையும் இழந்துவிட்டது. முழுமையான பேட்ஸ்மேனாக கேஎல்.ராகுல் மட்டுமே தங்கி இருந்தார்.

இந்த இடத்தில் இருந்து மீதம் இருந்த வீரர்களை வைத்துக்கொண்டு அவர் மேற்கொண்டு அணிக்கு 138 ரன்கள் வருவதற்கு காரணமாக அமைந்த. அபாரமான முறையில் விளையாடி 130 பந்துகளில் சதமும் அடித்தார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி இருந்த நிலையில் இருநூறு ரன்களை எட்டுவது கூட கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் கேஎல்.ராகுல் தன் பேட்டிங் மூலம் ஆட்டத்திற்குள் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் கேஎல்.ராகுல் பேட்டிங் பற்றி பேசியுள்ள சச்சின் கூறும்பொழுது “கேஎல்.ராகுல் மிகவும் நன்றாக விளையாடினார். அவரிடம் என்னைக் கவர்ந்தது அவருடைய சிந்தனை மிகவும் தெளிவாக இருந்ததுதான். அவரது புட் வொர்க் மிகவும் துல்லியமாகவும் உறுதியாகவும் இருந்தது. இப்படி எல்லாம் சரியாக இருக்கும் பொழுதுதான் சிறந்த ஆட்டம் வெளிப்படுகிறது.

நேற்று இந்திய அணி இருந்த விதத்தில் இருந்து தற்போது 245 ரன்கள் என்று முடித்து இருப்பதில், இந்திய அணி மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு வரிசைக்கு பர்கர் மற்றும் கோட்சி இருவரும் நல்ல சேர்க்கையாக இருக்கிறார்கள். பந்துவீச்சுக்கு இருந்த சாதகம் மற்றும் இந்தியா இருந்த நிலைமைக்கு பார்த்தால், தென் ஆப்பிரிக்கா தங்களுடைய பந்துவீச்சில் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்து இருக்காது!” என்று கூறியிருக்கிறார்!