ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு குறிப்பிட்ட இந்தியவீரர்களை விளையாட வைக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.
பங்களாதேஷ அணி இந்த மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு வருகை தருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இந்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது.
16 பேர் கொண்ட இந்திய அணி
ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (வி.கீ), துருவ் ஜூரல் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயால்.
இந்த அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு இங்கிலாந்து தொடருக்கு அடுத்து மீண்டும் இன்னொரு வாய்ப்பாக பங்களாதேஷ் தொடரில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆண்டு ஆர் சி பி அணிக்கு விளையாடிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாலுக்கு இந்திய தேசிய அணியில் முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அணியில் மொத்தம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இருவருக்கு இடமில்லை
இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பேசி இருக்கும் பிராட் ஹாக் கூறும்பொழுது “என்னுடைய பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் கில், விராட் கோலி என நான்கு பேட்ஸ்மேன்கள் வருவார்கள். இதற்கு அடுத்து ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் ரவீந்திர ஜடேஜா வருவார். அதற்கு அடுத்து தேவைக்கு தகுந்தபடி சர்ப்ராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இருப்பார்கள்.
இதையும் படிங்க : ஆஸி டி20.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. 3 அறிமுக வீரர்கள்.. இந்தியாவில் 2026 உலகக்கோப்பைக்கு குறி
மேலும் என்னுடைய பிளேயிங் லெவனில் பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இருப்பார்கள். இந்த அணியில் கேஎல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் இருவருக்கும் நான் இடம் கொடுக்க மாட்டேன். மேலும் இந்த மொத்த அணியுமே சிறப்பாக விளையாடக்கூடியது. ஆஸ்திரேலியா சென்று சிறப்பாக விளையாட முடிந்தவர்கள். எனவே நல்ல துவக்கம் அவர்களுக்கு தேவை. இதன் காரணமாக கேஎல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் இல்லாமல் சென்று விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.