கதம் கதம்.. இந்த 29 வயசு வீரர் விளையாடலனா உலக கோப்பைய மறந்துடுங்க – முகமது கைஃப் இந்திய அணி வாய்ப்பு பற்றி கணிப்பு!

0
543
Kaif

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் உலகக் கோப்பைக்காக எல்லா அணிகளும் வேகமாகத் தயாராகி வருகின்றன. சில இடங்களுக்கு வீரர்களைக் கண்டறிவதும், சில வீரர்களின் காயங்கள் எப்படியானதாக இருக்கும்? என்று முடிவுக்காக காத்திருப்பதுமாக தயாரிப்புகள் செல்கின்றன.

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த டி20 உலகக்கோப்பை முதலே வீரர்களின் காயம் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி வருகிறது. கடந்த முறை இந்திய அணியின் பந்துவீச்சில் முதுகெலும்பாக இருந்த ஜஸ்ட்ப்ரீத் பும்ரா காயத்தால் இல்லாதது, அனுபவ இடதுகை ஸ்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாதது, முக்கியமான அரையிறுதியில் எதிரொலித்தது.

- Advertisement -

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது, முன்பை விட மோசமாக வீரர்களின் காயங்கள் இந்திய அணி நிர்வாகத்தை கவலை அடைய வைத்திருக்கின்றன. ஜஸ்ட்பிரீத் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், பிரசித் கிருஷ்ணா என்று இந்த பட்டியல் நீள்கிறது.

மேலும் தற்பொழுது முகமது சிராஜ் காயத்தில் உள்ளதாக தகவல் வந்திருக்கிறது. இவர்கள் எல்லோருமே இந்திய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணிக்கான திட்டத்தில் இருந்தவர்கள். ஒரு அணியின் தயாரிப்பு திட்டத்திலிருந்து ஐந்து, ஆறு வீரர்கள் வெளியேறினால், அந்த அணி உலகின் எவ்வளவு சிறந்த பெரிய அணியாக இருந்தாலும் வெற்றி பெற முடியாது.

தற்பொழுது காயமடைந்த முக்கிய வீரர்களின் பட்டியலில் இருந்து ஜஸ்ட்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் குணமாகி வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே அடுத்து அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் பும்ரா அணியை வழிநடத்துகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்கான உலகக் கோப்பை வாய்ப்பு பற்றி பேசி உள்ள முகமது கைஃப் ” இது காயம் அடைந்துள்ள வீரர்கள் கிடைப்பதை பொறுத்தது. பும்ரா உடல் தகுதியுடன் திரும்பினால், அவர் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக உலக கோப்பையில் இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் எவ்வளவு பிட்டாக இருக்கிறார்? என்று ஆசியக் கோப்பையில் நமக்குத் தெரிந்துவிடும். எனவே நான் அவரது பந்துவீச்சை பார்க்கப் போகிறேன். பும்ரா நல்ல உடல் தகுதியுடன் அணியில் இருந்தால் உள்நாட்டில் இந்தியா வலிமையான அணியாக இருக்கும்.

தற்போது முக்கிய வீரர்களை இந்திய அணியில் காயத்தால் காணவில்லை என்பதால், பேப்பரில் இந்திய அணி வலுவானதாக தெரியவில்லை. கேஎல்.ராகுல், ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட் ஆகியோரை நாம் தற்போது இழந்திருக்கிறோம். பும்ரா விளையாடவில்லை என்றால் இந்தியாவுக்கு உள்நாட்டிலேயே உலகக் கோப்பை மிகவும் கடினமானதாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!