8 ஃபோர்ஸ் 6 சிக்ஸ்.. தனியாளாக கலக்கிய சிஎஸ்கே சமீர் ரிஸ்வி.. புவி அணி தோல்வி.. உபி டி20 2024

0
326
Rizvi

தற்போது நடைபெற்று வரும் உத்தர பிரதேஷ் டி20 லீக் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடிய சமீர் ரிஸ்வி தனி ஆளாக போராடி தன்னுடைய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் 20 வயதான இளம் வீரர் சமீர் ரிஸ்வியை 8.40 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.காரணம் அவர் கடந்த ஆண்டு இதே உத்தர பிரதேஷ் டி20 லீக்கில் இரண்டு சதங்கள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தனி ஒரு வீரராக போராட்டம்

இன்று உத்தர பிரதேஷ் டி20 லீக் தொடரின் மூன்றாவது போட்டியில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ ஃபால்கன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வரிசையாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இந்த வருடம் விளையாடிய இளம் வீரர் சமீர் ரிஸ்வி எதிர் முனையில் விளையாடும் பேட்ஸ்மேன்களை பற்றி கவலைப்படாமல் தனி ஒரு வீரராக அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கைவசம் விக்கெட் இருந்தால் விளையாடுவதைப் போல விக்கெட் சரியும் பொழுதும் விளையாடினார்.

- Advertisement -

மொத்தம் 51 பந்துகளை சந்தித்த கேப்டன் சமீர் ரிஸ்வி எட்டு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 89 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 174.51. இவருக்கு அடுத்தபடி அதிகபட்சமாக பேட்டிங் வரிசையில் எட்டாவதாக வந்த சுபம் மிஸ்ரா 20 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். மற்றபடி எந்த ஒரு வீரர்களும் சரியான பங்களிப்பை கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கொடுக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. லக்னோ ஃபால்கன்ஸ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் அனுபவ புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 33 ரன் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

வெற்றிக்குப் போராடிய லக்னோ ஃபால்கன்ஸ்

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த லக்னோ ஃபால்கன்ஸ் அணிக்கு கேப்டன் ப்ரியம் கர்க் 23 பந்தில் 31 ரன்கள், சமர்த் சிங் 13 பந்தில் 29 ரன்கள், ஆராதயா யாதவ் 21 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். ஆனாலும் இதுவெல்லாம் அந்த அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. அந்த அணி இறுதியாக 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பரபரப்பாகச் சென்ற இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வியின் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்து வீச்சு தரப்பில் மோசின் கான் நான்கு ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்ல அது என் கையில இல்ல.. இப்ப நம்பிக்கை தமிழ்நாடுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

கடந்த முறை இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இரண்டு சதங்கள் அடித்ததால் தான் சிஎஸ்கே அணிக்கு 8.40 கோடிக்கு சமீர் ரிஸ்பி வாங்கப்பட்டார். எனவே இந்த முறை இந்த தொடரில் இளம் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -