இந்திய கிரிக்கெட்ல அது என் கையில இல்ல.. இப்ப நம்பிக்கை தமிழ்நாடுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
154
Surya

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சூரியகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறார். தற்போது இந்த முயற்சி குறித்து அவர் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43.62 ஆவரேஜில் 5628 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

தமிழ்நாடு புச்சி பாபு தொடர்

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறுவது பற்றி பேசி உள்ள சூர்யாகுமார் யாதவ் ” இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த வீரர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நான் கூட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு எனக்கு காயம் ஏற்பட்டது. வாய்ப்பு பெற்ற நிறைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு தகுதியானவர்கள்.

முன்னோக்கி செல்லும் பொழுது நான் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் அது என்னுடைய கையில் கிடையாது. இப்போது என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பது தமிழ்நாட்டில் நடக்கும் புச்சி பாபு டெஸ்ட் தொடர்தான். இதைத்தொடர்ந்து துலீப் டிராபியில் விளையாடுவது. பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

- Advertisement -

சவாலான விஷயம்

டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் சவாலான ஒரு வடிவம். நீங்கள் எப்பொழுதும் இதில் ஒரு படி மேலே இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட் விளையாடுவது போல விளையாட முடியாது. ஆனால் நீங்கள் எப்படியான உடல் மொழி உடன் இருக்கிறீர்கள் என்பது களத்தில் முக்கியம். நீங்கள் எப்படியான சிந்தனைகளை செய்ய வேண்டும் என்பதை பயிற்சியிலேயே செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : இந்திய உள்நாட்டு வீரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிசிசிஐ ஜெய்ஷா அறிவிப்பு.. இளம் வீரர்கள் மகிழ்ச்சி

நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் விளையாட சென்று விட்டு அதிகம் சிந்திக்க முடியாது. பயிற்சி அமர்வுகள் மற்றும் நீங்கள் விளையாட செல்வதற்கு முன்பிருக்கும் நேரம் மட்டும்தான் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியது. நீங்கள் சென்று நன்றாக செய்துவிட்டால் அடக்கத்தோடு இருங்கள். உங்களால் நல்ல முறையில் செயல்பட முடியவில்லை என்றால் மீண்டும் திரும்பி வந்து அடிப்படையிலிருந்து விஷயங்களை ஆரம்பித்து பயிற்சி செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -