பாகிஸ்தானும் இந்த இந்திய வீரருக்குதான்.. எங்க நாட்டுல எங்க வீரர்களுக்கு மதிப்பில்லை – கம்ரன் அக்மல் பேட்டி

0
628
Kamran

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறியிருக்கிறார்.

இந்திய நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் பம்ரா ஆகியோர்களுக்கு பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதாகவும், இவர்கள் வந்து பாகிஸ்தானில் விளையாடினால் அங்கு அது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வுகளைக் கொடுக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி ஓய்வு

மேலும் கம்ரன் அக்மல் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு பெறுவதற்கு முன்னால் பாகிஸ்தான் வந்து விளையாடி விட வேண்டும் என்றும், அப்பொழுதுதான் பாகிஸ்தானில் அவர் எவ்வளவு பெரிய வீரராக இருக்கிறார் என்பது புரியும் என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறும் பொழுது ” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஓய்வு பெறுவதற்கு முன்பாக பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும். ஏனென்றால் இவர்கள் உலக கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்கள் ஆக இருக்கிறார்கள். இவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து விளையாடும் பொழுது இவர்களை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகிறார்கள்”

- Advertisement -

“இவர்களின் அசாத்தியமான பேட்டிங் மற்றும் மேட்ச் வின்னிங் திறமையின் காரணமாக ஏராளமானரசிகர்கள் இவர்களுக்கு உலகெங்கும் இருந்து வருகிறார்கள். அதே சமயத்தில் இவர்கள் பாகிஸ்தான் வந்து விளையாடினால் இவர்களுக்கு உலகெங்கும் இருக்கும் ரசிகர்களை பாகிஸ்தானில் அதிக ரசிகர்கள் இருப்பதை உணர்வார்கள்”

பாகிஸ்தானில் விராட் கோலி

“விராட் கோலி பலருக்கு தற்போது முன்மாதிரியாக இருந்து வருகிறார். ரோகித் சர்மா தற்பொழுது உலக கோப்பையை வென்ற கேப்டன். பும்ரா தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடும் பொழுது அது பரபரப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு ரசிகருக்கும் அது தனித்தனி உணர்வுகளை உண்டாக்கும்”

இதையும் படிங்க : 5 வருடம்.. 249 போட்டி.. ரோகித் விராட் பும்ராவுக்கு எதுக்கு சலுகை?.. இத பாருங்க – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

“விராட் கோலி தன்னுடைய 19 ஆவது வயதில் பாகிஸ்தான் வந்து விளையாடினார். அப்பொழுது அவர் பிரபலமானவர் கிடையாது. ஆனால் இப்பொழுது அவர் பாகிஸ்தான் வந்தால் பாகிஸ்தான் வீரர்களை விட அவருக்குத்தான் அதிக ரசிகர்கள் இருப்பதை பார்க்க முடியும். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய ரசிகர்கள் பாகிஸ்தானில் இல்லை. எனவே இதன் காரணமாக இவர்கள் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -