5 வருடம்.. 249 போட்டி.. ரோகித் விராட் பும்ராவுக்கு எதுக்கு சலுகை?.. இத பாருங்க – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
304
Manjrekar

இந்த ஆண்டு அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துலீப் டிராபி துவங்குகிறது. இந்தத் தொடரில் எல்லா இந்திய வீரர்களும் விளையாட விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம், மீண்டும் இந்திய வீரர்களை உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு அழைத்து வருவதில் தீவிரமாகக் கண்டிப்பு காட்டி வருகிறது. அதே சமயத்தில் மூத்த வீரர்களை நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வைக்க மாட்டோம் அவர்களின் மரியாதை உடன் நடத்துவோம் என்றும் கூறுகிறது.

- Advertisement -

பிசிசிஐ முரணான பேச்சு

இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்காக போட்டிகளில் இருந்தாலும் அல்லது காயமடைந்து இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டியது இல்லை. அப்படி இல்லையென்றால் அவர்கள் கட்டாயம் உள்ளாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ கூறுகிறது.

அதே சமயத்தில் விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர மூத்த வீரர்களை மரியாதை உடன் நடத்த வேண்டும் என்பதால் அவர்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வைக்க மாட்டோம் என்றும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அவர்களுடைய சிறந்த வீரர்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வைப்பதில்லை எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் சா கூறியிருந்தார். இந்த பேச்சு முற்றிலும் முரணானதாக இருந்தது.

- Advertisement -

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆதாரம்

இப்படியான நிலையில் கடந்த ஐந்து வருடங்களில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மூவரும் இந்திய அணிக்கு எத்தனை சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்கள்? என்பதை புள்ளி விவரத்துடன் காட்டி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து முன்னாள் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன்.. திடீர் ஓய்வு அறிவிப்பு.. பின்னணி காரணம் என்ன?

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைக்கும் பொழுது ” இந்திய அணி கடந்த ஐந்து வருடங்களில் 249 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ரோகித் சர்மா 59% போட்டிகளிலும், விராட் கோலி 61% போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்கள். பும்ரா 34% சதவீத போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது இவர்கள் இந்த ஆண்டு துலீப் டிராபியில் விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -