உள்நாட்டு கிரிக்கெட்ல செஞ்ச 2 தந்திரத்தை இங்க செஞ்சேன்.. ரோகித் அந்த விஷயத்துல தங்கம் – பும்ரா பேட்டி

0
176
Bumrah

பங்களாதேஷ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பும்ரா பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது அவர் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா பற்றியும் இந்த போட்டிக்கான பந்துவீச்சு திட்டம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சில் முதல் ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கைப்பற்றினார். மேலும் அனுபவ வீரர் முஷ்பிக்யூர் ரஹீம் விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி கட்டத்தில் இரண்டு விக்கெட்டை கைப்பற்றி பங்களாதேஷ் இன்னிங்ஸை சீக்கிரத்தில் முடித்து வைத்தார்.

- Advertisement -

ரோகித் பவுலர்களை புரிந்து கொள்வார்

இந்த போட்டி குறித்து பேசிய பும்ரா கூறும் பொழுது ” ரோகித் சர்மா பவுலர்களை நன்றாக புரிந்து கொள்ளக் கூடியவர். நாங்கள் அனைவருமே கொஞ்சம் காலம் கழித்து டெஸ்ட் போட்டி விளையாட வருகிறோம். எனவே நாங்கள் சில விஷயங்கள் பேச வேண்டி இருந்தது. மேலும் நாங்கள் சிறிய ஸ்பெல் வீசுவதாக முடிவு செய்தோம். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல வேகத்தில் வீசுவோம். ஸ்பின்னர்கள் நல்ல தாக்கத்தை கொடுக்க முடியும். புதிய பதில் தையல் கொஞ்சம் கடினமாக இருக்கும் பொழுது மூவ்மெண்ட் கிடைக்கும் அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம்”

“சீராகத் தொடர்ந்து ஸ்விங் கிடைக்காத காரணத்தினால் நாங்கள் ஃபுல் லென்த்தில் வீசும் திட்டத்தை கொண்டு வரவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் உடனே எங்களுடைய திட்டத்தை களத்திலேயே மாற்றிக் கொண்டோம். நாங்கள் எங்களுடைய பந்துவீச்சின் கோணத்தை மாற்றி பந்து வீச முடிவு செய்தோம். அதேசமயத்தில் புதிய பந்தில் கொஞ்சம் உதவியும் கிடைத்தது”

- Advertisement -

உள்நாட்டு கிரிக்கெட் தந்திரம்

மேலும் பேசிய பும்ரா கூறும் பொழுது “நான் ஒரு லென்த் பந்தை பேசிய பொழுது எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. மேலும் பந்தும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை. எனவே நான் ஏதாவது புதியதாக செய்ய வேண்டியதாக இருந்தது. இதன்காரணமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் பயன்படுத்திய சில தந்திரத்தை கொண்டு வந்தேன்”

“நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பவுன்சர்கள் வீசுவது கிடையாது. இன்று வானிலை கடுமையாக இருந்த காரணத்தினாலும், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட நாள் கழித்து வருவதாலும் பவுசர்கள் வீச வேண்டிய சூழல் அமைந்தது”

இதையும் படிங்க : நாங்க நல்ல ஆடாததுக்கு காரணம் பந்துதான்.. இதே பங்களாதேஷ்னா கதையே வேற – டஸ்கின் அஹமத் பேச்சு

“மேலும் பந்தும் தையலும் வியர்வையால் ஈரமாகிவிட்டது. எனவே நான் வித்தியாசமான ஆப்ஷன்கள் பந்துவீச்சில் பயன்படுத்தி விக்கெட் எடுக்க வேண்டும் மேலும் ரன்னையும் கட்டுப்படுத்தியாக வேண்டும். இதை லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் செய்து பார்க்க வேண்டியதாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -