இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தங்களால் சரிவர செயல்பட முடியாமல் போனதற்கு காரணம் பந்துதான் என பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமத் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தானில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் அணி கடந்த வாரங்களில் வென்றது. இதன் காரணமாக அந்த அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடுவதற்கு வந்தது. ஆனால் தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு மிக அருகில் இருக்கிறார்கள்.
இந்தியர்களுக்கு தெரியும் எங்களுக்கு தெரியாது
முதல் டெஸ்ட் போட்டியில் பின்னாடி குறித்து பேசி இருக்கும் டஸ்கின் அகமத் கூறும் பொழுது “எஸ் ஜி பந்தில் விளையாடுவது ஒரு சவாலான விஷயமாகும். இந்தியர்கள் சிறுவயதிலிருந்தே எஸ்.ஜி பந்தில் விளையாடுவதால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.இதன் காரணமாக அவர்களுக்கு ஒரு பெரிய நன்மை கிடைக்கும்”
“எஸ்.ஜி பந்து பற்றி நான் உணர்ந்தது என்னவென்றால் முதல் பத்து முதல் 12 ஓவர்களில் சவால் இருந்தது. இந்தியா உள்நாட்டில் எந்த அணிக்கு எதிராகவும் மிகப்பெரிய அணியாக இருந்திருக்கிறது. எந்த அணிக்கும் உள்நாட்டில் விளையாடும் பொழுது கூடுதல் சாதகங்கள் கிடைக்கும். நாங்கள் அடுத்து பங்களாதேஷில் விளையாடும் பொழுது சிறப்பாக விளையாடுவோம்”
இதுதான் ஏமாற்றம் அளிக்கிறது
மேலும் பேசிய அவர் “எங்களுடைய பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறிது உதவி இருக்கவே செய்கிறது. ஆனாலும் நாங்கள் பேட்டிங்கில் இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். இதன் காரணமாக நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம். நாங்கள் முதல் 10 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்தது தான் போட்டியில் எங்களுக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : வெறும் 2 ரன்.. ராயுடு கேட்சால் இர்பான் அணி வெற்றி.. ஹர்பஜன் அணி நூலிழையில் தோல்வி.. லெஜண்ட்ஸ் கிரிக்கெட்
பொதுவாக இந்தியாவில் எஸ்.ஜி பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை பந்துகளில் தையல் எப்பொழுதும் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதே சமயத்தில் கூக்கபுரா பந்தில் தையல் பெரிய அளவில் இருக்காது. இந்த வித்தியாசத்தால்தான் தங்களால் நன்றாக விளையாட முடியவில்லை என டஸ்கின் அகமத் கூடியிருக்கிறார்.