“இந்தியா இதை இங்க செய்வது வெட்கக்கேடானது.. நியாயமே கிடையாது!” – ஏபி டிவில்லியர்ஸ் கொதிப்பு!

0
26181
BCCI

கிரிக்கெட்டில் தற்பொழுது மிகப்பெரிய நாடுகளாக இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து 3 நாடுகளும் இருந்து வருகின்றன. திறமையின் அடிப்படையில் மட்டுமில்லாமல் வணிகத்தின் அடிப்படையிலும் இவர்கள் மூவரும் பெரியவர்களாக இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் திறமை என்ற அளவில் இவர்களுக்குமோசமான இடத்தில் கிடையாது. ஆனால் இவர்களுக்கு போட்டியை ஒதுக்குவதில் பாரபட்சம் இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக தற்பொழுது இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.

அதே சமயத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடி நாடு திரும்புகிறது. அதை கடந்த முறை சென்ற பொழுது மூன்று போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தொடரை இரண்டுக்கு ஒன்று என இழந்தது.

ஐசிசியை பொறுத்த வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளுக்கு இடையே மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர்களை நடத்துகிறது. இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் மட்டுமே தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தங்களுக்குள் விளையாடுகின்றன. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கூட இல்லாதது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள ஏ பி டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடப்பது தென் ஆப்பிரிக்க பார்வையில் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நிறைய போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. இது மிகுந்த வெட்கக்கேடான விஷயம்.

இந்த அணிகளுக்கு இடையே மட்டும் பெரிய வரலாறு உருவாகிறது. அதே சமயத்தில் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா வந்து விளையாட விரும்புகிறார்கள். இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது.

நான் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் குழுவில் இருந்தால் நிச்சயம் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் ஆடுகளத்தை கேட்பேன். தென் ஆப்பிரிக்கா இந்தியாவை வெல்ல உதவும் இரண்டு விஷயங்கள் இவை. இந்திய பந்துவீச்சாளர்களால் இதைப் பிரித்தெடுக்க முடியாது. இந்திய அணி இங்கு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறது. தற்போதைய நிலைமைகள் அவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!