இதோட டி20க்கு முழுக்கு போடுகிறார்களா ரோகித் மற்றும் விராட் கோலி? – அனில் கும்ப்ளே பேட்டி!

0
2502

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு இதுதான் கடைசி டி20 உலக கோப்பையா? அனில் கும்ப்ளே பதில் அளித்திருக்கிறார்.

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறி உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

இதற்கு முழு முக்கிய காரணம் இந்திய அணிக்கு சரியான துவக்கம் எந்த ஒரு போட்டியிலும் கிடைக்காதது தான். இந்த தோல்விக்கு கேல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில் 34 வயது விராத்கோலி மற்றும் 35 வயது ரோஹித் சர்மா இருவருக்கும் இதுதான் கடைசி டி20 உலக கோப்பையா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது. இதற்கு இந்திய அணியின் ஜாம்பவான் சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“வயது ஒரு காரணமாக இருக்கலாம் நீங்கள் எத்தகைய கேள்விகளை எழுப்புவதற்கு. ஆனால் அது பற்றிய தற்போது எவ்வித முடிவையும் நாம் எடுக்க முடியாது. வீரர்கள் தான் அந்த முடிவை எடுக்க முடியும். ஏனெனில் இத்தனை வருடங்கள் அவர் எப்பேர்ப்பட்ட கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற்று தந்திருக்கிறார் என்று பலரும் அறிவோம். மேலும் இனிவரும் போட்டிகளிலும் எப்படி செயல்படுவார்கள் என்பது அவர்கள் மன வலிமையை பொருத்தது. ஆகையால் எப்படி விளையாடுவார்கள் என்பதை வைத்து தான் அடுத்த இரண்டு வருடங்களில் வரவிருக்கும் டி20 உலக கோப்பையில் அவர்கள் இருப்பார்களா? என்பது பற்றி கூற முடியும். அதை அணி நிர்வாகம் புள்ளி விவரப்படி பார்த்துக் கொள்ளும்.” என்றார்.

- Advertisement -