தற்போது இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெல்வதற்கு அருகில் இருந்து ஆனால் நான்கு ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை கொடுத்து பரிதாபமாக இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை பெண்கள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அயர்லாந்து அணியின் துவக்க வீராங்கனை சாரா போர்ப்ஸ் 18 பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து வெளியேறினார்.இன்னொரு துவக்க வீராங்கனை குல்டர் ரெய்லி 38 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது இடத்தில் வந்த எமி ஹண்டர் 71 பந்துகளில் 66 ரன்கள், ஐந்தாவது இடத்தில் வந்த லீக் பால் 111 பந்துகளில் 81 ரன்கள், ஆறாவது இடத்தில் வந்த ரெபாக்கா ஸ்ட்ரோக்கெல் 61 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள். 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்தது. இலங்கைத் தரப்பில் அச்சினி குலசூர்யா மற்றும் கவிஸ்கா தில்ஹரி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் மற்றும் நட்சத்திர வீராங்கனை சமாரி அட்டப்பட்டு 27 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனாலும் மூன்றாவது இடத்தில் விளையாடிய இன்னொரு நட்சத்திர வீராங்கனை ஹர்ஷிதா மாதவி 124 பந்துகளில் 105 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்தார். மேலும் நான்காவது இடத்தில் வந்த கவிஷ்கா தில்ஹரி 71 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.
ஒரு கட்டத்தில் 41.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 210 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்க 49 பந்துகளில் 46 ரன்கள் தேவைப்பட்டது. எனவே இந்த போட்டியில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வென்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில் யாரும் எதிர் பார்க்காத முறையில் அடுத்து வெறும் நான்கு ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இலங்கை அணி இழந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 214 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடைசி இக்கட்டுக்கு தாக்குப்பிடித்த விளையாடிய ஜோடி மேற்கொண்டு 26 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையும் படிங்க : இங்கிலாந்து மகளிர் 100 பந்து.. இந்திய தீப்தி சர்மா திரில் சிக்ஸ்.. சாம்பியனானது லண்டன் ஸ்பிரிட்
பரபரப்பான இந்த போட்டியில் அயர்லாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. அயர்லாந்து அணியின் தரப்பில் ஜானே மகுயர் 2, ஆர்லின் கெல்லி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி கடைசியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். இலங்கை அணி பெண்கள் கிரிக்கெட் அணி ஆண்களுக்கு கிரிக்கெட் அணி போல உள்நாட்டில் மட்டுமே சிறப்பாக விளையாடக் கூடியதாக இருக்கிறது!