இங்கிலாந்து மகளிர் 100 பந்து தொடர்.. இந்திய தீப்தி சர்மா திரில் சிக்ஸ்.. சாம்பியனானது லண்டன் ஸ்பிரிட்

0
149
Deepti

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தி ஹன்ட்ரெட் 100 பந்து தொடரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் இங்கிலாந்தில் நடத்தி வருகிறது. இன்று பெண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் தீப்தி சர்மா பரபரப்பான கட்டத்தில் அடுத்த சிக்ஸ் மூலமாக லண்டன் ஸ்பிரிட் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இன்று பெண்கள் 100 பந்து தொடர் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற லண்டன் ஸ்ரிட் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. வெல்ஸ் ஃபயர் அணிக்கு துவக்க வீராங்கனைகளாக வந்த டன்க்ளே 6 பந்தில் 2 ரன்கள், பிமான்ட் 16 பந்தில் 21 ரன்கள், மூன்றாவது இடத்தில் வந்த ஹைலி மேத்யூஸ் 26 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

ஒருபுறம் வீராங்கனைகள் வருவதும் போவதுமாக இருக்க, மற்றொருபுறம் நிலைத்து நின்று விளையாடிய ஜோனசேன் 41 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 54 ரன்கள் குவித்தார். 100 பந்துகள் முடிவில் வெல்ஸ் ஃபயர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. லண்டன் ஸ்பிரிட் பந்துவீச்சில் இவா கிரே மற்றும் சாரா கிளன் இருவரும் 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய தீப்தி சர்மா 20 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே விட்டு தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் ஸ்பிரிட் அணிக்கு ஆஸ்திரேலியா நட்சத்திர வீராங்கனை மெக் லேனிங் 9 பந்தில் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதே சமயத்தில் இன்னொரு துவக்க வீராங்கனை ரெட்மாயின் 32 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து கேப்டன் ஹீதர் நைட் 18 பந்தில் 24 ரன்கள், கிப்சன் அதிரடியாக ஒன்பது பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். லண்டன் ஸ்பிரிட் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கடைசி மூன்று பந்தில் நான்கு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் பேட்டிங் முனையில் இருந்த இந்திய தீப்தி சர்மா சிங்கிள் ரன் எடுக்கும் எந்த முயற்சியும் இல்லாமல் நேராக சந்தித்த பந்தை தூக்கி சிக்ஸருக்கு அடித்தார்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு சும்மா இல்ல.. அந்த இங்கிலாந்து வீரர்கிட்ட பேசி பிளான் பண்ணி இருக்கேன் – ஆஸி நாதன் லயன் பேச்சு

இறுதிப் போட்டியின் கடைசி நேரத்தில் இருந்த டென்ஷன் முடிவுக்கு வந்தது. இரண்டு பந்துகள் மீதம் இருந்த நிலையில் லண்டன் ஸ்பிரிட் அணி வெல்ஸ் ஃபயர் அணியை வீழ்த்தி முதல் முறையாக இங்கிலாந்து 100 பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய தீப்தி சர்மா 16 பந்துகள் சந்தித்து 16 ரன்கள் எடுத்து ஆணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -