ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இளம் வீரர்கள் பலரும் தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்கள். இது குறித்து பாராட்டி உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 4 இளைஞர்கள் தன்னுடைய கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் அவர்கள் விரைவில் இந்திய அணிக்காக விளையாட போகிறார்கள் என்றும் பாராட்டியுள்ளார்.
இந்த பட்டியலில் ரவி சாஸ்திரி முதலில் குறிப்பிட்டு இருப்பது பஞ்சாப் அணியின் பிராப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஸ் ஆர்யா தான். இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, இந்த இரண்டு வீரர்களும் பஞ்சாப் அணிக்காக சிறப்பான தொடக்கத்தை அளிக்கின்றார்கள். இந்த இளம் வீரர்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இளம் வயதில் அதிரடி:
ஒருவர் 14 வயதிலேயே அதிரடி காட்டி ரன்களை சேர்த்து வருகிறார். பிரியான்ஸ் ஆர்யாவை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் 23 வயதில் சிஎஸ்கே போன்ற அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் மொத்தம் அவர் 254 ரன்கள் சேர்த்திருக்கிறார். 21 என்ற அளவில் இருக்கின்றது. இதேபோன்று சிஎஸ்கே வீரர் ஆயூஸ் மாத்ரே அபாரமாக விளையாடி வருகிறார்.
ருதுராஜ்க்கு மாற்றுவீராக வந்த அவர் 15 பந்துகளின் 32 ரன்கள் என மும்பைக்கு எதிராக பட்டையை கிளப்பி இருக்கிறார். இதில் நான்கு பௌண்டரியும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். ஆயுஷ் மாத்ரே ஆடிய ஷாட்கள் மூன்றுமே பிரம்மிக்கும் வகையில் இருந்தது. 17 வயதில் ஸ்டார் வீரர்கள் அடங்கிய மும்பையின் பந்துவீச்சை அவர் அடித்த விதம் என்னால் நம்பவே முடியவில்லை.
வைபவ் சமாளிக்க வேண்டும்:
இதனால் அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்திருக்கிறார். எனவே ஆயுஷ் மாத்ரேக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது. அவர்கள் ஆடிய ஷாட்டுகளை பார்க்கும்போது இவர் தான் எதிர்காலத்திற்கான வீரர் என்று தோன்றுகிறது. அவரை சரியான முறையில் கையாண்டும் என்றால் நிச்சயம் பெரிய வீரராக வர வாய்ப்பு உள்ளது.
இதையும் பாருங்க: குர்னால் பாண்டியா வெற்றிக்கு காரணம் இதுதான்.. சிஎஸ்கேவை மறைமுகமாக அஸ்வின் விமர்சித்தாரா?.. என்ன நடந்தது
இதை போன்று 14 வயது வீரர் என்ன செய்த விடப் போகிறார் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அவர் அடித்த முதல் சிக்ஸ்சே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. தற்போது அந்த 14 வயது வீரர் கிடையே பல விஷயங்களை பலரும் செய்வார்கள் அவரை கட்டுப்படுத்த பல திட்டங்கள் தீட்டப்படும். அதை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்பதையும் பார்க்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.