குர்னால் பாண்டியா வெற்றிக்கு காரணம் இதுதான்.. சிஎஸ்கேவை மறைமுகமாக அஸ்வின் விமர்சித்தாரா?.. என்ன நடந்தது

0
104
Krunal

தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆர்சிபி வீரர் குர் னால் பாண்டியா சிறப்பாக செயல்படுவதற்கான காரணங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விக்கட்டுகளை இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்த பொழுது சிறப்பாக விளையாடிய குர்னால் பாண்டியா 49 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்து அசத்தினார். மேலும் பந்துவீச்சிலும் அவர் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறார்.

- Advertisement -

குர்னால் பாண்டியா எழுச்சி

இதுவரையில் ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக ஒரு சீசனில் குர்னால் பாண்டியா அதிகபட்சமாக 12 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். ஆனால் தற்போது ஆர்சிபி அணிக்காக அவர் வெறும் 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி விட்டார். இதுதான் அவருடைய அதிகபட்ச விக்கெட் ஆகவும் ஒரு சீசனில் அமைந்திருக்கிறது.

மேலும் இது மட்டும் இல்லாமல் நேற்று அவர் அடித்த 73 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் அவருக்கு அதிகபட்ச ரன்னாகவும் அமைந்திருக்கிறது. இந்த முறை அவர் ஆர்சிபி அணிக்கு பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். இதன் காரணமாக ஆர்சிபி அணி எதிர் பார்த்ததைவிட அதிகம் வலிமை அடைந்திருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கேவை அஸ்வின் விமர்சித்தாரா?

இந்த நிலையில் குர்னால் பாண்டியா வெற்றிக்கான காரணம் குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் ” ஒரு வீரர் புதிதாக ஒரு அணிக்குள் செல்லும் பொழுது அவரை சரியாக எப்படி பயன்படுத்திக் கொள்வது என சில நேரங்களில் அணி நிர்வாகங்கள் தாமதமாக புரிந்து கொள்ளும். சில நேரங்களில் இது இயல்பாக உடனே நடந்து விடும். தற்போது ஆர்சிபி அணியில் அவரை எப்படி பயன்படுத்துவது என்பது அந்த அணி நிர்வாகத்திற்கு உடனே புரிந்திருக்கிறது”

இதையும் படிங்க : ஓபனா சொல்றேன்.. 9 டீமும் அவங்கள பார்த்து பயப்படுறாங்க.. 11 பேரும் மேட்ச் வின்னர்கள் – பியூஸ் சாவ்லா பேட்டி

“மேலும் பந்து வீச்சு பேட்டிங் அந்த அணிக்கு சரியான இடங்களில் இயல்பாக அவர் பொருந்தி போகிறார். உதாரணமாக அவர் பந்து வீச்சுக்கு பவர் பிளேவில் வரவேண்டியதே கிடையாது. மேலும் பேட்டிங்கிலும் தேவைப்பட்டால் மட்டுமே அவரை மேலே கொண்டு வருவார்கள். இது அப்படியே ராஜஸ்தான் ராயல்ஸ் டெம்ப்ளேட் ஆகும்” என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் மறைமுகமாக ராஜஸ்தான் ராயல் அணியில் தன்னை பந்துவீச்சு மற்றும் பயன்படுத்திக் கொண்டது போல சிஎஸ்கே அணியில் சீக்கிரம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறியதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்!

- Advertisement -