இது குப்பை மாதிரியான பேச்சு.. தோனி பற்றி ஹர்பஜன் சிங் கருத்துக்கு.. சிஎஸ்கே பிசியோ பதிலடி

0
125
Dhoni

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி பற்றி இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறிய ஒரு பரபரப்பான கருத்துக்கு சிஎஸ்கே அணியின் பிசியோ டாமி சிம்செக் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அன்-கேப்டு பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் தோல்விக்கு பிறகு மகேந்திர சிங் தோனி கோபப்பட்டது என நிறைய கருத்துக்களை ஹர்பஜன் சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஹர்பஜன் சிங் பரபரப்பான கருத்து

இரண்டு உலக கோப்பைகளை வென்ற மகேந்திர சிங் டோனி அன்கேப்டு பிளேயர் லிஸ்டில் வருவது சரி இல்லை என்பது போலாக பேசிவிட்டு, இறுதியாக இது குறித்து ஏதாவது மேலும் பேசினால் சர்ச்சையாகிவிடும் என ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.

இத்தோடு ஆர்சிபி அணிக்கு எதிரான இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த பிறகு மகேந்திர சிங் தோனி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த ஸ்கிரீனை கையால் குத்தினார் எனவும் தான அதை நேராக பார்த்ததாகவும் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் இன்று மிகவும் வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

குப்பை மாதிரியான பேச்சு

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி உடன் எப்பொழுதும் பயிற்சியில் இருக்கும் பிசியோ டாமி சிம்செக் ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்துக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் ஹர்பஜன் சிங் கூறுவது முழுக்க பொய் என்பது போல தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து டாமி சிம்செக் கூறும் பொழுது “இந்தக் கருத்து குப்பை மாதிரியானது. மகேந்திர சிங் தோனி எதையும் உடைக்கவில்லை. எந்த போட்டிக்குப் பிறகும் நான் அவரை ஆக்ரோஷமாக பார்த்ததும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஓபனா சொல்றேன்.. தோனியை விட ரோகித்தான் பெஸ்ட் கேப்டன்.. இத்தனை காரணம் இருக்கு – ஹர்பஜன் சிங் தேர்வு

இந்திய கிரிக்கெட்டில் பொதுவாக ஆக்ரோஷமான வீரராக ஹர்பஜன் சிங் அறியப்பட்டவர். எதுவாக இருந்தாலும் அவர் மிகவும் வெளிப்படையாக பேசக் கூடியவர். இந்த நிலையில் சிஎஸ்கே பிசியோ இவ்வாறு பேசியிருப்பதற்கு ஹர்பஜன்சிங் என்ன மாதிரியான பதிலடி கொடுக்கப் போகிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -