ஓபனா சொல்றேன்.. தோனியை விட ரோகித்தான் பெஸ்ட் கேப்டன்.. இத்தனை காரணம் இருக்கு – ஹர்பஜன் சிங் தேர்வு

0
165
Rohit

இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய கேப்டன்களில் மகேந்திர சிங் தோனியை விட ரோகித் சர்மா சிறந்தவர் என்று கூறியிருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக 3 ஐசிசி தொடர்களை வென்றவர். இதில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடக்கம். இதன் காரணமாக இந்திய கேப்டன்களில் அவரையே சிறந்தவராக பலரும் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கேப்டனாக ரோகித் சர்மா எழுச்சி

2021 ஆம் ஆண்டு ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதும் எல்லா வீரர்களும் எல்லா இடங்களிலும் விளையாட வேண்டும், இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும், அதிலிருந்து இந்திய அணி மீண்டும் வரும் வகையில் வீரர்கள் இருக்க வேண்டும் எனத் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

மேலும் 2022 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு அதிரடியான பேட்டி முறைக்கு இந்திய அணியை ரோகித் சர்மா மாற்றினார். அதை அவரே முன்னின்று நடத்தினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றார். இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

தோனியை விட ரோகித் சர்மா சிறந்த கேப்டன்

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “ரோகித் வீரர்களின் கேப்டன் என்கின்ற காரணத்தினால் நான் தோனியை விட அவரை சிறந்த கேப்டனாக தேர்வு செய்தேன். அவர் வீரர்களிடம் சென்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அவர் சக வீரர்களுடன் இணைந்து கொள்கிறார்”

“அதே சமயத்தில் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி பாணி மிகவும் வித்தியாசமானது. அவர் எப்பொழுதும் அதிகம் பேசவே மாட்டார். அவர் நினைப்பதை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார். வீரர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அவருடைய மௌனம்தான் அடிப்படையாக இருந்திருக்கிறது”

இதையும் படிங்க : 289/4.. கேப்டன் ருதுராஜ் சாய் சுதர்சன் ஏமாற்றம்.. அபிமன்யு ஈஸ்வரன் தனியாளாக போராட்டம் – இரானி கோப்பை 2024

“சிறந்த விஷயம் என்னவென்றால் ரோகித் சர்மா தன்னுடைய வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்லும் காலகட்டங்களில் கூட நிறைய நண்பர்களை போகும் வழியில் உருவாக்கிக் கொண்டே சென்றார். அவருக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது. அவருடன் எல்லோருமே இருக்கிறார்கள். அவரைப் பற்றி யாரும் தவறாக பேசுவதை நீங்கள் பார்க்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -