கோச் டிராவிட்டை விட.. கேப்டனா இருந்தப்போ அவர் எனக்கு செஞ்ச விஷயம் வாழ்நாளில் மறக்க முடியாது – ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

0
85

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அவரது புத்திசாலித்தனமான முடிவை கண்டு பலரும் வரவேற்று வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் தனக்கு உண்டான பிணைப்பு குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் குறித்து ரோஹித்

கடந்த நவம்பர் 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக தனது பணியை துவங்கிய ராகுல் ராவிட் ரோஹித் சர்மாவுடன் இணைந்து தனது சிறப்பான பயிற்சியின் மூலமாக 2023ஆம் ஆண்டு இந்திய அணியை ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார். அதற்குப் பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்ததோடு அந்த வெற்றி தருணத்தில் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகினார்.

தற்போது அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் டிராவிட் குறித்து பேசிய ரோஹித் சர்மா மூன்று வருடங்கள் அவரோடு பயணித்தது மிகச் சிறந்த அனுபவமாகும் மற்றும் அவரது தன்னம்பிக்கை மற்றும் எளிமையான குணம் தன்னை வெகுவாக ஈர்த்ததாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

என்னால் இதை மறக்கவே முடியாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ராகுல் பாய் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். நான் அவரோடு மூன்று வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். ராகுல் டிராவிட் தான் எனக்கு ஒரு நாள் தொடரில் எனக்கு அறிமுக தொப்பியை வழங்கினார். நான் அயர்லாந்தில் அறிமுகமானபோது அவர்தான் எனக்கு கேப்டனாக இருந்தார். என் வாழ்க்கையில் அந்த தருணங்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.

இதையும் படிங்க:14 வயசு பையனின் சதம் இல்லை.. சிஎஸ்கேவுக்கு எதிரா அவரின் மெகா அதிரடிதான் ஐபிஎல்லின் பெஸ்ட் இன்னிங்ஸ் – இந்திய முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் அவரது பெயர் நிச்சயமாக இடம்பெறுகிறது. ஆனால் பயிற்சியாளராக இருந்தபோது அவர் எங்கள் முன் தன்னை எப்படி காட்டிக் கொண்டார் என்பதுதான் எனக்கு அவரிடம் இருந்து நிறைய உத்வேகமான விஷயங்களை கற்றுக் கொள்ள வழி வகுத்தது. ராகுல் பாய் எனக்கு நிறைய ஆதரவை வழங்கி இருக்கிறார். அவர் என்னிடம் கூறினார். ‘நீ என்ன செய்கிறாய் என்பதை அறியும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்திருக்கிறாய். நீ என்ன செய்தாலும் அதை ஏன் செய்கிறாய் என்கிற அளவுக்கு எனக்கு புரிந்திருக்கிறது’ என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -