இந்தியா, பாகிஸ்தான் பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐபிஎல் 2025 மீதமுள்ள போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த இன்னிங்ஸ் குறித்து இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சிந்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் சிறந்த இன்னிங்ஸ்
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக போட்டி தொடரானது கைவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒரு வாரத்திற்குள் மீதம் இருக்கும் போட்டிகள் துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் கவுன்சில் தரப்பிலிருந்து அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் தற்போது முடிந்துள்ள போட்டிகள் வரை ஒவ்வொரு அணி பேட்ஸ்மேன்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரரான 14 வயது வீரர் வைபவ் சூரியவன்சி குஜராத் அணிக்கு எதிராக அவர் அடித்த 38 பந்துகளில் 108 ரன்கள் பலரிடையே சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பெங்களூர் வீரரான ரோமாரியா செப்பேர்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர் அடித்த 14 பந்துகளில் 53 ரன்களை சிறந்த இன்னிங்ஸ் ஆக கருதுகிறார்.
இந்திய முன்னாள் வீரர் கருத்து
இதுகுறித்து அவர் கூறும் போது “ஆர்சிபி அணியில் பட்டிதாரின் அச்சமற்ற கேப்டன் அணுகுமுறை மற்றும் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் ஆகியவை சிறப்பான முறையில் இருந்துள்ளது. விராட் கோலி இயக்கி வரும் ஒரு இஞ்சின் இது. மேலும் பில் சால்ட் விராட் கோலி மற்றும் பட்டிதார் ஆகியோர் சிறப்பாக இயங்கி வரும் ஒரு யூனிட்டாக இது அமைந்துள்ளது. மேலும் அவர்களுடைய மிடில் வரிசையை பார்க்கும் போது ஜித்தேஷ் ஷர்மா, டிம் டேவிட் மற்றும் ரோமாரியா செப்பர்ட் ஆகியோர் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:நான் சொல்றத ரிஷப் பண்ட் யோசிச்சா.. அவரோட மோசமான நிலை என்னனு நல்லா புரியும் – சஞ்சய் பாங்கர் பேட்டி
இந்த ஐபிஎல் தொடரில் ரொமாரியா ஷெப்பர்ட் சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர் விளையாடிய 14 பந்துகளில் 53 ரன்கள் சிறந்த இன்னிங்ஸ் ஆகும். மேலும் பெங்களூர் அணியின் பந்துவீச்சை பார்க்கும் போது மற்ற ஆண்டுகளை விட தற்போது சிறந்த முறையில் இருக்கிறது. புவனேஸ்வர் குமார் சுயாஷ் ஷர்மா மற்றும் ஜோஸ் ஹாசில் வுட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்கள் என பேசி இருக்கிறார்.