இந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படாத வீரர்களை வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட விடவேண்டும் – ரவி சாஸ்திரி!

0
180
Ravi shastri

தற்பொழுது உலகத்தின் மிகச் சிறந்த மற்றும் நம்பர்1 உரிமையாளர்கள் டி20 தொடராக, இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 தொடர் இருக்கிறது!

இந்த ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை விற்றதன் மூலம் ஐபிஎல் தொடர் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. உலகத்தில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட இரண்டாவது விளையாட்டு தொடராக ஐபிஎல் இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொருத்தமட்டில் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி உண்டு. அதே சமயத்தில் டி20 வடிவத்தில் வேறு எந்த நாட்டில் நடத்தப்படும் உரிமையாளர்கள் தொடர்களிலும் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. அப்படி யாராவது பங்கேற்றால் அவர்களுக்கு இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு தரப்படாது என்கின்ற விதியை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்றி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த விதியால் இந்தியாவில் தயாராகும் வீரர்கள் பல்வேறு நாடுகளின் சூழல்களுக்கு பழகப் முடியாமல் போகிறது. இதுகுறித்து இந்தியாவிலிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது இது சம்பந்தமாக பேசியுள்ள இந்திய அணியின் மூத்த முன்னாள் வீரர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில முக்கியமான கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” இந்த நாட்டில் உள்ள மக்களின் தொகையைப் பாருங்கள். 1.4 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் 11 பேர் மட்டுமே இந்திய அணிக்காக விளையாட முடியும். இப்படி இருக்கும் பொழுது மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

இவர்களுக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருக்கிறது. அதாவது உலகம் முழுவதும் நடத்தப்படும் உரிமையாளர் டி20 லீக்குகளில் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது. இது பொதுஅறிவு, இது அவர்களின் வாழ்க்கை, இது அவர்களின் வருமானம்.

இப்படி இந்தியா முழுக்க இருக்கின்ற நிறைய வீரர்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒப்பந்தம் செய்யப்படாமல் இருக்கின்ற வீரர்கள், உலகம் முழுவதும் நடத்தப்படும் டி20 தொடர்களில் கலந்து கொள்ள எது தடுக்கிறது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் ரவி சாஸ்திரி கூறுகையில் இந்திய அணிக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒப்பந்தம் செய்யப்படாத இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.