இந்திய வீரருக்கு 2 ஆண்டுகள் தடை.. அதிரடி முடிவெடுத்த பிசிசிஐ.. புதிய வீரர் தேர்வு!

0
859
BCCI

இந்தியாவின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ இருந்து வருகிறது.

பிசிசிஐ தனியார் அமைப்பாக இருந்த போதிலும், நாட்டின் பெயரைப் பயன்படுத்துவதோடு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் செயல்படும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

தற்போது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய பொருளாதாரத்தையும் அதிகாரத்தையும் கொண்டுள்ள கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியமே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மிகப்பெரிய அதிகாரத்திற்கு ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

உள்நாட்டு கிரிக்கெட்டை பலப்படுத்தினால் மட்டுமே பொருளாதாரம் மற்றும் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியும் என்கின்ற காரணத்தினால், பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்துவதில் மிகுந்த தாராளத்தை காட்டி வருகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டிற்கான உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரஞ்சித் டிராபி இன்று முதல் துவங்கி நடைபெறுகிறது. இந்த தொடரில் ஒடிசா அணியின் முக்கிய வீரர் ஒருவர் வயது சான்றிதழில் மோசடி செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ரஞ்சித் தொடரில் ஒடிசா அணிக்காக விளையாட இருந்த, அந்த அணியின் முக்கிய வீரர் சுமித் சர்மா வயது சான்றிதழில் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டதால், பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்திருக்கிறது. அவருக்கு பதிலாக ஒடிசா மாநில கிரிக்கெட் தேர்வாளர்கள் தாரிணி வதேராவை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஒடிசா கிரிக்கெட் நிர்வாகம் கூறும்பொழுது “ஒடிசா ஆண்கள் சீனியர் அணியின் வீரர் சுமித் ஷர்மா பலவகையான வயது சான்றிதழ்களை சமர்ப்பித்து உள்ளதால், இரண்டு ஆண்டுகள் பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட அவருக்கு பிசிசிஐ தடை விதித்திருக்கிறது!” என்று கூறப்பட்டு இருக்கிறது!