கடைசி ஓவர் 16 ரன்.. தொடர்ந்து 6வது வெற்றி.. பிளே ஆஃபில் ஆர்சிபி.. சிஎஸ்கே வெளியேறியது

0
759
IPL2024

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் முதலில் வந்து பிச்சை தேர்ந்தெடுத்தார். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆர்சிபி அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 58 பந்தில் 78 ரன் கிடைத்தது. விராட் கோலி 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கேப்டன் பாப் டு பிளேசிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை உருவாக்கி கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து ரஜத் பட்டிதார் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் சேர்ந்து 28 பந்துகளில் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ரஜத் பட்டிதார் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

கடைசிக் கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 14 ரன்கள், மேக்ஸ்வெல் 5 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்கள். இறுதி வரை ஆட்டம் இழக்காத கேமரூன் கிரீன் 17 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே தரப்பில் பந்துவீச்சில் சர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் ஆட்டத்தின் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். அடுத்து டேரில் மிட்சல் 6 பந்தில் 4 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரகானே 22 பந்தில் 33 ரன், ரச்சின் ரவீந்தரா 37 பந்தில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து சிவம் துபே 15 பந்தில் 7 ரன்கள், மிட்சல் சான்ட்னர் 4 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் பிளே ஆப்க்கு தகுதி பெற கடைசி மூன்று ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவைப்பட தோனி மற்றும் ஜடேஜா களத்தில் இருந்தார்கள். சிராஜ் வீசிய 18 வது ஓவரில் 15 ரன்கள் வந்தது. பெர்குசன் வீசிய 19வது ஓவரில் 17 ரன்கள் வந்தது.

இதையும் படிங்க : விராட் பிளேசிஸ் பெரிய வேலை பாத்துட்டாங்க.. இங்க பேட்டிங் பண்றது சாதாரண விஷயம் கிடையாது – கேமரூன் கிரீன் பேட்டி

இதற்கு அடுத்து ஓவரில் பிளே ஆப் தகுதி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. யாஸ் தயால் வீசிய அந்த ஓவரில் தோனி முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த சர்துல் ஒரு பந்தை தவறவிட்டு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி இரண்டு பந்தில் 10 ரன்களுக்கு ஜடேஜா களத்தில் நின்றார்.ஆனால் அந்த இரண்டு பந்திலும் ஜடேஜா ரன் எடுக்க முடியவில்லை. இறுதியாக சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

- Advertisement -