சொன்னதை செய்த ஷமி..திரும்பி வருவது எப்போது?.. யாருக்காகவும் பின்வாங்காத பிசிசிஐ – வெளியான தகவல்கள்

0
115
Shami

தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் முகமது ஷமி ஏற்கனவே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது போலவே அவரது மறுவருகை எப்போது இருக்கும் என்பதை தெளிவு படுத்தி விட்டார். மேலும் பிசிசிஐ தொடர்ந்து வீரர்களிடம் ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இருந்து வருவதும் வெளிச்சமாகி இருக்கிறது.

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது அணிக்காக கணுக்காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு ஊசி போட்டுக் கொண்டு முகமது ஷமி விளையாடினார். இதனால் அவருடைய காயம் பெரிதாக, அதற்குப் பிறகு அவர் அறுவை சிகிச்சை செய்து தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

பின்வாங்காத பிசிசிஐ

அதே சமயத்தில் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் வந்த பிறகு சில முக்கிய விஷயங்களில் மிகவும் கண்டிப்புடன் இந்திய கிரிக்கெட் வாரியம் நடக்க ஆரம்பித்திருக்கிறது. வீரர்களுக்கு நல்ல வசதியை ஏற்படுத்தி தருவதற்கு உறுதியளிக்கும் பிசிசிஐ மற்றபடி தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த சலுகையையும் கொடுப்பதில்லை என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கிறது.

இந்த வகையில் இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து வலிமையாக வைத்திருக்க வேண்டும் என்றால் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி காயத்தில் இல்லாத மற்றும் இந்திய அணிக்கு அந்தச் சமயத்தில் விளையாடாத வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். மேலும் காயத்திலிருந்து திரும்பும் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். தற்பொழுது முகமது ஷமி விஷயத்திலும் அது நடந்திருக்கிறது.

- Advertisement -

சொன்னதை செய்த ஷமி

முகமது ஷமி சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். தற்போது பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்புள்ள 31 பேர் கொண்ட அணியை பெங்கால் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டிருக்கிறது. அதில் முகமது ஷமி பெயரும் இடம் பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க : ஒரு அம்பயரா சொல்றேன்.. தோனி பெஸ்ட் கேப்டன்தான்.. ஆனா இந்த விஷயத்துல ரொம்ப நியாயமா இருப்பாரு – அனில் சவுத்ரி பேட்டி

இதன் மூலம் அவர் ரஞ்சி டிராபியில் விளையாடி உடல் தகுதியை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 11 உத்தரப்பிரதேச அணிக்கு எதிராகவும் அக்டோபர் 18 பீகார் அணிக்கு எதிராகவும் பெங்கால் அணி ரஞ்சி டிராபியில் விளையாடுகிறது. இதில் விளையாடும் முகமது ஷமி அடுத்து ஆஸ்திரேலியாவில் இந்தியா ஏ அணி விளையாடும் பயிற்சி போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அவர் அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில்தான் இடம் பெறுவார் என்றும் தெரியவருகிறது.

- Advertisement -