ஒரு அம்பயரா சொல்றேன்.. தோனி பெஸ்ட் கேப்டன்தான்.. ஆனா இந்த விஷயத்துல ரொம்ப நியாயமா இருப்பாரு – அனில் சவுத்ரி பேட்டி

0
989

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய புகழ் பெற்ற நடுவரான அணில் சௌத்ரி விக்கெட் கீப்பிங்கில் ஸ்டம்புக்கு பின்னால் இருக்கும் மகேந்திர சிங் தோனி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் மகேந்திர சிங் தோனி வெற்றிகரமான கேப்டன் ஆக திகழ்ந்தவர். அவரது தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றதோடு மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி அவரது தலைமையில் ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது. விக்கெட் கீப்பராக செயல்படும் தோனி ஸ்டெம்புகளுக்கு பின்னால் நின்று கேப்டன் ஆகவும் அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடியவர்.

பேட்ஸ்மேன் அசைவுகள், அவருக்கு தகுந்தவாறு பந்தை எப்படி வீச வேண்டும் என்று கணிப்பது, மேலும் அதற்கு தகுந்தவாறு பீல்டிங் செட் அப் என அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்வார். மேலும் நடுவரின் முடிவு எதிர்த்து எடுக்கப்படும் டிஆர்எஸ் முறையில் மகேந்திர சிங் தோனி துல்லியமானவர் என்று இந்திய புகழ்பெற்ற நடுவர் அணில் சவுத்ரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அணில் சவுத்ரி விரிவாக கூறும்போது ” மகேந்திர சிங் தோனி மிகவும் துல்லியமான மனிதர். எவ்வளவு துல்லியமாக இருக்கக்கூடியவர் என்றால் ஸ்டம்ப்புகளுக்கு பின்னால் ஒரு விக்கெட் கீப்பர் இருக்கும்போது பந்து வீச்சாளரின் நிலைமையை பெரும்பாலும் பார்க்க முடியாது. ஆனால் மகேந்திர சிங் தோனி அதில் மிகவும் நியாயமாக இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

அதாவது ஸ்டம்புக்கு முன்னால் நடைபெறும் விஷயங்களை கணிப்பதில் துல்லியமானவர் என்று பாராட்டி பேசி இருக்கிறார். டிஆர்எஸ் என்பது ஆன் ஃபீல்டு முடிவுகளை சவால் செய்து அப்பீல் செய்யும் ஒரு முறையாகும். நடுவரின் முடிவில் ஒரு அணி நம்பிக்கை கொள்ளாத போதெல்லாம் தங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதற்காக ஒரு அணி டிஆர்எஸ் முறையை பயன்படுத்துவது வழக்கம்.

இதையும் படிங்க:அந்த டீம்ல எங்களுக்கு சிக்கலே இவர்னாலதான்.. 20-30 பந்து ஒரே மாதிரி வீசுறாரு – இலங்கை கேப்டன் வேதனை

எனவே தோனி அதில் துல்லியமானவராக இருக்கிறார். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் தனது கேப்டன் பதவியை விட்டு விலகிய தோனி அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -