நான் பங்களாதேஷ் அணிக்கு ஃபீல்டிங் செட் பண்ண காரணம்.. அந்த முன்னாள் இந்திய வீரர்தான் – ரிஷப் பண்ட் பேட்டி

0
2181
Rishabh pant

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய வீரர்களின் அபாரமான பங்களிப்பால் இந்திய கிரிக்கெட் அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் செய்த செயல் குறித்து இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் அது குறித்து கேள்வி எழுப்ப, பண்ட் அதற்கு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

- Advertisement -

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அஸ்வினின் அபார சதத்தின் மூலம் 376 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய வங்கதேச அணி இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விரைவிலேயே விக்கெட்டுகள் இழக்க 149 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணியில் கில் மற்றும் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் டஸ்கின் அகமது பந்து வீச வரும்போது, ரிஷப் பண்ட் வங்கதேச அணியின் கேப்டன் சாண்டோவை அழைத்து ஃபீல்டிங்கில் மாற்றங்கள் செய்யச் சொன்ன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நிகழ்வு வைரலானதைத் தொடர்ந்து இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் பண்டிடம் அது குறித்து கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதாவது “தஸ்கின் அகமது இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசப்படும் போது அவருக்கு ஏன் பில்டிங் செட் அமைத்துக் கொடுத்தீர்கள்? வங்கதேச அணியின் கேப்டன் யார் சாண்டோவா அல்லது ரிஷப் பண்டா?” என்று பண்டிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பண்ட் பதில் அளித்த விதம் பார்வையாளர்களை கவர்ந்தது.

அதாவது ரிஷப் பண்ட் அது குறித்து கூறும் போது “அஜய் ஜடேஜா பாய் மற்றும் நான் இருவரும் மற்ற அணி விளையாடினாலும் சரி அல்லது நமது சொந்த அணி விளையாடினாலும் சரி கிரிக்கெட் எப்படி சிறப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து அடிக்கடி விவாதிப்போம். இரண்டாவது இன்னிங்ஸில் தஸ்கின் அகமது பந்து வீச வரும்போது அங்கு குறிப்பாக ஒரு பீல்டர் இல்லை. இரண்டு பீல்டர்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததால் ஒருவரை மாற்றி அமைக்கும் படி சொன்னேன்” என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:5 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. ரெய்னா மாஸ் பேட்டிங்.. பதிலடி தந்த தவான் அணி வீரர்.. குஜராத் வெற்றி.. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணிக்கு அடுத்த போட்டி வருகிற 27ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நல்ல இடத்தை பிடிக்க முயற்சிக்கும்.

- Advertisement -