இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான டோயம் ஹைதராபாத் அணியும், ஷிகார் தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணிகளும் மோதின.
இதில் குஜராத் கிரேட்ஸ் அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் சுரேஷ் ரெய்னா அணியை வீழ்த்தி இருக்கிறது.
மூத்த கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் லெஜென்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் இதன் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற டோயம் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 10 ஓவர்களில் 82 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தாலும் சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி அணியை மீட்டு எடுத்தார். 27 பந்துகளை எதிர் கொண்ட நிலையில் 5 பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 44 ரன்கள் குவித்து டோயம் அணியின் ரன்கள் உயர்வதற்கு உதவினார்.
இதனால் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ஷிகார் தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வான்விக் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார். மறுமுனையில் கேப்டன் தவான் 20 பந்துகளில் 21 ரன்கள் குவித்து வெளியேற, மூன்றாம் வரிசையில் களமிறங்கிய சிம்மோன்ஸ் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
தொடக்க ஆட்டக்காரர் வான்விக் டோயம் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்க 69 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட நிலையில் எட்டு பவுண்டரி மற்றும் 9 சிக்சர்கள் என 115 ரன்கள் விளாசி குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். மறுமுனையில் யாஷ்பால் சிங் 11 பந்துகளை எதிர் கொண்டு 13 ரன்கள் குவித்து இந்த இருவர் கூட்டணியில் 19.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
115 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய வான் விக் ஆட்டநாயகன் விருது வென்றார். எனவே புள்ளி பட்டியலில் குஜராத் கிரேட்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது முதல் இடத்தில் வகிக்கிறது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான டோயம் ஹைதராபாத் அணி ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது இரண்டாவது போட்டியிடம் தோல்வி அடைந்திருக்கிறது.
இதையும் படிங்க:நான் பாலோ பண்ணி வந்தது இவரைத்தான்.. ஆனா ஹர்பஜன் சிங் விஷயத்துல சந்தேகப்பட்டாங்க – அஸ்வின் ஓபன் பேட்டி
எனவே இனி புள்ளி பட்டியலில் முன்னேற அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.