10 வருட முன்.. அவங்க இருந்தப்போ பாக் அணியின் லெவல் வேற.. ஆனா இப்போ பரிதாபமா இருக்கு – அஸ்வின் பேட்டி

0
30

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே ஆன இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.

இது தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வலிமையாக இருந்ததாகவும், அப்போது பாகிஸ்தான் அணிக்கு முன்னணி நட்சத்திர ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் அஸ்வின் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போது எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பாக மிஸ்பா, யூனிஸ்கான் போன்ற வீரர்களை வைத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய போது கூட பாகிஸ்தான் அணியை வீழ்த்துவது சாத்தியமில்லாமல் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தான் அணியை வீழ்த்துவது என்பது சாத்தியமில்லாமல் இருந்தது.

அப்போது பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷா போன்ற சிறந்த வீரர்கள் இருந்தார்கள். அப்போது மேலும் இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட பாகிஸ்தான் அணியை பார்த்துவிட்டு இப்போது பார்க்கும்போது நம்ப முடியாத இடத்தில் இருக்கிறது. ஷான் மசூத் என்ற நபருக்காக நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். ஷான் மசூத் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு கிரிக்கெட் வீரர். மிகவும் திறமையாக பேசக்கூடிய ஒரு வீரர்.

இதையும் படிங்க: ஆஸி டி20.. இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன்.. நட்சத்திர வீரர் ரூல்ட் அவுட்.. திடீர் அதிரடி மாற்றங்கள்

அவர் பாகிஸ்தான் அணிக்காக நல்ல கேப்டனாக இருக்க முடியும். ஆனால் பாபர் அசாம் போன்ற அனுபவம் கொண்ட வீரர் கேப்டனாக இல்லாத போது பாகிஸ்தான் அணியை கையாள்வது என்பது மிகவும் கடினமான காரியம். அந்த அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் என்பது எளிதாக இருக்காது. உண்மையில் பாகிஸ்தான் அணியின் வரலாறு என்பது வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், சோயப் அக்தர், இம்ரான் கான், இன்சமாம் உல் ஹக், இஜாஸ் அகமது, சலீம் மாலிக் இருந்தபோது வலிமையாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -