இந்திய அணி நாளை மறுநாள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் மோத இருப்பதற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் பற்றி பேசியிருக்கிறார்.
புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்ததும், பழைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் சேர்ந்து பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்பரே ஆகியோரும் வெளியேறினார்கள். ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மட்டுமே தக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பீரின் பயிற்சி குழு
தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக வந்திருக்கும் கம்பீர் தன்னுடைய பயிற்சியாளர்கள் குழுவில் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் நெதர்லாந்தின் டஸ்கேட், பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல் ஆகியோரை கொண்டு வந்திருக்கிறார்.
இவர்கள் எல்லோருமே கம்பீர் உடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியவர்களாகவும் மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தவர்களாகவும்இருக்கிறார்கள். கம்பீர் தன்னுடைய பயிற்சியாளர் வேலைக்கு சரியானவர்கள் என நினைத்தவர்களை பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார்.
டிராவிட் பயிற்சியாளர்கள் குழுபோல் இல்லை
இதுகுறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது ” உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ராகுல் டிராவிட் பாய், விக்ரம் ரத்தோர் மற்றும் பராஸ் மஹாம்பிரே ஆகியோர் வித்தியாசமான பயிற்சி அணுகுமுறையை கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் ஒரு புதிய ஆதரவு பயிற்சியாளர்கள் குழு வரும்பொழுது அவர்கள் புதுமையான பயிற்சி அணுகுமுறைகளை கொண்டு வருவது என்பது இயல்பானதுதான்”
“அந்த வகையில் கம்பீர் பயிற்சியாளர்கள் குழு ராகுல் டிராவிட் பயிற்சியாளர்கள் குழுவை விட வித்தியாசமாக இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அணிக்கு எதிராக நாங்கள் விளையாடிய பொழுது இவர்கள் விவேகம் ஆனவர்களாகவும் அணியின் இயக்கவியலை சீக்கிரத்தில் புரிந்து கொண்டவர்களாகவும் இருந்தார்கள்”
இதையும் படிங்க : என் டீமை ஜெயிக்க எல்லாருக்கும் ஆசைதான்.. ஆனா இங்கிலாந்துக்கு நடந்ததுதான் பங்களாதேஷுக்கும் – ரோஹித் சர்மா பேட்டி
“மேலும் நாங்கள் ஒரு உலகக் கோப்பையை வென்றிருக்கின்ற காரணத்தினால் ஓய்வெடுத்து மகிழ்ச்சியாக கொண்டாட ரிலாக்ஸ் செய்ய எல்லாம் நினைக்கவில்லை. எங்களுக்கு அடுத்தடுத்து தயாராவதற்கு நேரம் குறைவாகவே இருக்கிறது. உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்காகவும் நாங்கள் வெற்றி பெறவே விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.