என் டீமை ஜெயிக்க எல்லாருக்கும் ஆசைதான்.. ஆனா இங்கிலாந்துக்கு நடந்ததுதான் பங்களாதேஷுக்கும் – ரோஹித் சர்மா பேட்டி

0
604
Rohit

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்குவதற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தொடர் குறித்து பல முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் குறிப்பாக பாகிஸ்தான் அணியை வென்று வரும் பங்களாதேஷ் அணியின் நம்பிக்கை குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு ரோகித் சர்மா தனக்கே உரிய நகைச்சுவையான முறையில் பதில் அளித்து அசத்தினார்.

- Advertisement -

வரலாற்று வெற்றியால் வந்த வார்த்தைகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் வெற்றியையும், மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் வெற்றியையும் கடந்த வாரத்தில் பங்களாதேஷ் அணி பெற்று இருந்தது. இது அவர்களுடைய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இருக்கிறது.

இந்த வரலாற்று வெற்றியின் காரணமாக அந்த அணியின் தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ இந்திய அணியை இரண்டு போட்டிகளிலும் வெல்வதற்கு நாங்கள் தயார் செய்து வந்திருக்கிறோம், அதற்கே முயற்சி செய்வோம் என்று கூறியிருந்தார். தற்போது இதற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதிலடி தரும் விதமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியை வெல்ல எல்லோருக்கும் ஆசைதான்

இது குறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது ” ஒவ்வொரு அணியும் தோற்கடிக்க விரும்புகிறது. இந்த வகையில் அவர்கள் பேச்சு வேடிக்கையாக இருக்கட்டும். எங்கள் கிரிக்கெட்டை எப்படி விளையாடுவது என்று எங்களுக்கு தெரியும். இங்கிலாந்து இங்கு வந்த பொழுதும் இப்படியான விஷயங்களை எல்லாம் சொன்னது. ஆனால் நாங்கள் அவற்றில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் எங்களுடைய தயாரிப்புகளை சிறப்பாக வைத்திருக்க விரும்புகிறோம். இந்தியா வரும் எதிரணிகளை சிறந்த முறையில் ரீட் செய்கிறோம்”

இதையும் படிங்க : இந்த தடவ மிஸ் ஆகாது.. இந்திய அணி இதுல கண்டிப்பா மாட்டுவாங்க.. இவங்க 4 பேர் போதும் – கில்லஸ்பி கருத்து

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. எனவே நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல விரும்புகிறோம். நாங்கள் எந்த விதமான பரிசோதனை முயற்சிகளையும் செய்ய மாட்டோம். எனவே எங்களுக்கு போட்டிக்கு வெல்வதற்கு எது சரியான அணியோ அதையே தேர்வு செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -