யார் என்ன சொன்னாலும் இப்படித்தான் செய்வேன்.. என் கேப்டன்சி இந்த மாதிரி தான் – ரோகித் சர்மா பேச்சு

0
219
Rohit

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்தும், தன்னுடைய கேப்டன்சி எப்படி ஆனது என்பது குறித்தும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக இரண்டரை நாட்கள் பாதிக்கப்பட்டது. இந்தப் போட்டியை ஒரு ஸ்டேஷன் மீதம் வைத்து இந்திய அணி வென்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் சரித்திர தாக்குதல் வெற்றி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குதல் பாணியில் விளையாடி பெற்ற வெற்றிகளில் இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 34.4 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 285 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தியது.

இதற்குப் பிறகு பங்களாதேஷ் அணியை ஆல் அவுட் செய்து 95 ரன் டார்கெட்டை எட்டி ஒரு செஷன் மீதம் வைத்து வென்றது. மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகவும் வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்வது என்று எடுத்த முடிவு பலராலும் பாராட்டப்படுகிறது.

- Advertisement -

என்னுடைய கேப்டன்சி இப்படிதான்

இது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “நான் எனது ஜட்ஜ்மெண்டை நம்புகிறேன் நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். முடிவுகள் எடுத்த பிறகு தைரியமாக செல்கிறேன். வெளிப்படையாக என்னை சுற்றி யோசனைகள் தருவதற்கு வீரர்கள் இருக்கிறார்கள். இறுதியாக என் மனதில் தோன்றும் முடிவை நம்புகிறேன். உங்களுக்கு இதுதான் மிகவும் முக்கியம்”

இதையும் படிங்க : 2024 கைகுலுக்காத ஆர்சிபி.. கடுப்பான தோனி கோபத்தில் இதை செய்தார்.. நேர்ல பார்த்தேன் – ஹர்பஜன் சிங் பேட்டி

“உயர் மட்டத்தில் நீங்கள் விளையாடும் பொழுது நீங்கள் தேவைப்படும் எல்லாவற்றையும் கொஞ்சம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் களத்தில் முடிவுகளை எடுக்க அமைதியாக இருக்க வேண்டும். மேலும் நிறைய முடிவுகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முடிவும் உங்கள் வழியில் செல்லாது. ஆனாலும் நீங்கள் அதை நம்ப வேண்டும். மேலும் உங்களுடைய அறிவு அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். நான் இதைத்தான் செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -