இந்தியா பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் விளையாடவே கூடாது – திடீரென போர்க்கொடி தூக்கும் கம்பீர்!

0
505
Gambhir

உலகின் எந்த ஒரு மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு அணிகள் மோதி கொண்டாலும், அந்த மைதானம் ரசிகர்களால் நிரம்பும், ஐசிசி யின் பாக்கெட் பணத்தால் நிரம்பும்.

இந்த அளவிற்கு உலக கிரிக்கெட்டில் மற்ற எந்த அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இல்லாத அளவுக்கான வணிகரீதியான மதிப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த இரண்டு நாடுகளும் விளையாட வேண்டிய தேவையும் இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்த இரண்டு நாடுகள் விளையாடும் போட்டிக்கு உணர்வுரீதியான தாக்கமும் மிக அதிகமாக இருக்கும். காரணம் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியலும் வரலாறும் அவ்வளவு வெப்பமானதாக இருக்கிறது.

இதன் காரணமாக இந்த இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் எங்கும் கிரிக்கெட் விளையாடுவது இல்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடுகிறார்கள். மேலும் ஆசியா கோப்பையிலும் விளையாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசியா கோப்பை மற்றும் உலகக்கோப்பை என இரு தொடர்களில் இந்த இரு அணிகளும் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் ஆவது விளையாட இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது அரசியலில் ஈடுபட்டு வரும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடவே கூடாது என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
“நான் அடிக்கடி விமர்சிக்கப்படலாம். ஆனால் ஒரு கிரிக்கெட் போட்டியை விட எங்கள் ராணுவ வீரரின் உயிர் பெரியது. எந்த ஒரு நிகழ்வையும் விட எனக்கு நாடு மிகப்பெரியது.

அரசியலில் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் என்று வரும்பொழுது அந்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அரசியலைப் பிரிக்கவே முடியாது.

இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் சூழ்நிலை மேம்படும் வரை, எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எல்லை தாண்டிய அத்துமீறர்களை ஒரு நாடு கொண்டிருக்கும் பொழுது அந்த நாட்டுடன் இந்திய வீரர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல!” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது அருகில் ஆசியக் கோப்பையும், இந்தியாவில் நடத்தப்பட இருக்கின்ற உலகக் கோப்பையும் இருக்கின்ற நிலையில் இப்படியான ஒரு கருத்தை கம்பீர் முன் வைத்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!