இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாதம் இந்தியா வரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 11, 14, 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
சதம் அடித்த வீரர் நீக்கம்
இந்தத் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் மற்றும் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மீண்டும் வந்திருக்கிறார்கள். இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் தொடர்ந்த துருவ் ஜுரல் நீக்கப்பட்டு, அவருடைய இடம் ரிஷப் பண்ட்டுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் தென் ஆப்பிரிக்க தொடரில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் இருவரில், ஜெய்ஸ்வாலுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ருதுராஜ் மீண்டும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
மீண்டும் வாய்ப்பில்லை
தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மூத்த வேகப் பந்துவீச்சாளர் முகமது சாமிக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதிக ரன்களை கொடுத்து வரும் பிரசித் கிருஷ்ணாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அருகில் டி20 உலகக் கோப்பை இருப்பதால் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இவர்களை விளையாட வைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. மேலும் அக்சர் படேல் தேர்வு செய்யப்படவில்லை. வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி என மூன்று ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: 6,6,6,6,6,4.. ஒரே ஓவரில் 34 ரன்.. மிரட்டல் சதம்.. ஹர்திக் பாண்டியா ருத்ர தாண்டவம்.. விஜய் ஹசாரே 2025
சுப்மன் கில்
ரோஹித் ஷர்மா
விராட் கோலி
கேஎல்.ராகுல்
ஷ்ரேயாஸ் ஐயர்
வாஷிங்டன் சுந்தர்
ரவீந்திர ஜடேஜா
முஹமத் சிராஜ்
ஹர்ஷித் ராணா
பிரசித் கிருஷ்ணா
குல்தீப் யாதவ்
ரிஷாப் பந்த்
நிதிஷ் குமார் ரெட்டி
அர்ஷ்தீப் சிங்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்






