“இந்தியா தென் ஆப்பிரிக்காவை அவமானப்படுத்துது.. இது தீங்கு!” – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
507
ICT

இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாடுகிறது. இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் வெள்ளைப்பந்து தொடர்கள் இரண்டும் நிறைவடைந்து இருக்கின்றன.

தற்பொழுது இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பாக்ஸிங் டே அன்று துவங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதலில் டாஸ் வென்று பந்து வீசுவது என முடிவு செய்ய, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்திருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடர் தற்பொழுது இந்திய அணிக்கு உலகக் கோப்பையை இழந்ததற்கு பின்னால் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. காரணம் இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை. மேலும் அதை மாற்றி அமைக்கும் பொழுது உலகக்கோப்பை தோல்விக்கு கொஞ்சம் ஆறுதலாகவும் அமையும்.

1992 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது.

ஆனால் தற்பொழுது இந்த முறையை மாற்றி அமைத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டுமே விளையாடுகிறது. இது தென் ஆப்பிரிக்கா தரப்பில் பலத்தை விவாதத்தை கிளப்பி இருக்கிறது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக இந்திய வீரர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “மூன்று போட்டிகள் கொண்ட தொடரை விட குறைவான போட்டி எண்ணிக்கை கொண்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேடை விளைவிக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பது மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாதுகாவலராக இருப்பது என்று பேசினால் போதாது. பேசுகின்ற படி நடந்து கொள்ளவும் வேண்டும். இப்போது இரண்டு டெஸ்டுகள் விளையாடினால் நாளை ஒரு டெஸ்ட்டும் விளையாடப்படும். இது சரியானது கிடையாது.

இந்தியா ஆஸ்திரேலியா சென்றால் 5 போட்டிகள் விளையாடுகிறது. இதேபோல் இங்கிலாந்து சென்றால் 5 போட்டிகள் விளையாடுகிறது. ஆனால் மூன்றாவது பெரிய அணியான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் என குறைக்கிறோம். இது தென் ஆப்பிரிக்காவுக்கு அவமானம் செய்யும் தீங்கு ஆகும். மேலும் இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தீங்கு விளைவிக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட் தான் உன்னதமானது என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!” என்று காட்டமாக கூறியிருக்கிறார்!