இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார பந்துவீச்சால் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முக்கியத் தூணாக விளங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்தது. இதில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சால் தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதற்குப் பிறகு ஃபாலோ ஆன் தராமல் தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணியில் சுப்மான்கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் அபார சதத்தின் உதவியின் மூலம் இந்தியா 287 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. அதற்குப் பிறகு 515 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி ரன்களை குவித்தனர். அதில் வங்கதேச அணியின் கேப்டனான சாண்டோ 127 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 82 ரன்களை குவித்தார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹாசன் 33 ரன்களும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஸ்லாம் 35 ரன்கள் குவித்தார்.
இதற்குப் பிறகு களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக நான்காம் நாள் ஆட்டத்தில் சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்றாகவே ஒத்துழைத்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்துவீசி 21 ஓவர்களில் 88 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் மற்றொரு பவுலரான ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்றைய நாளில் முதல் இடைவேளைக்கு பிறகே அஸ்வின் பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே இன்றைய முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு பின் வெறும் 11.1 ஓவர் மட்டுமே வீசப்பட்டிருக்கிறது. அஸ்வின் பந்து வீச ஆரம்பித்த அரை மணி நேரத்தில் போட்டி இந்தியா வசம் வந்திருக்கிறது.
இதையும் படிங்க:147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. அஸ்வின் படைத்த பிரம்மாண்ட சாதனை.. சென்னை சேப்பாக்கத்தில் ரெக்கார்டு
இதனால் 62.1 ஓவரில் 234 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.