தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட உள்நாட்டுத் தொடரில் இந்தியாவின் ஒருநாள் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பங்கேற்பது சந்தேகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 வயதான இவர், அக்டோபர் 25-ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியின் போது காயத்தை சந்தித்தார்.
அலெக்ஸ் கேரியை கேட்ச் பிடிக்க முயன்றபோது, ஐயரின் வயிற்றில் பலமான காயம் ஏற்பட்டு, அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். மருத்துவ பரிசோதனைகளில் அவரது மண்ணீரலில் காயம் மற்றும் உள் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. நவம்பர் 1-ஆம் தேதி சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், ஸ்ரேயாஸ் ஐயர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழு உடற்தகுதியை மீட்டெடுக்க அதிக நேரம் தேவைப்படும்.
இது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ஷ்ரேயஸ் ஐயர் முழு போட்டி தகுதியைப் பெற அதிக நேரம் எடுப்பார். மேலும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு அவரது காயத்திற்குப் பிறகு அவசரப்படுத்த விரும்பவில்லை. தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமே என்று கூறினார்.
இந்த நிலையில், ஷ்ரேயஸ் ஐயரின் பங்கேற்பு வரவிருக்கும் 50 ஓவர் தொடரில் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், துணைக் கேப்டனை மாற்றுவதற்கு மூன்று வீரர்களைப் பார்ப்போம்.ஷ்ரேயஸ் ஐயரை இந்திய அணியில் மாற்றும் முதல் வீரர் திலக் வர்மா. இடது கை பேட்ஸ்மேன் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம்பெற்றார். இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது, இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், திலக் மூன்று இன்னிங்ஸ்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், 23 வயதான இவர் இந்த ஆண்டு பலரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 14 டி20 இன்னிங்ஸ்களில் 380 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 42.22 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 127.94, ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், திலக் வர்மா ஆஸ்திரேலியா ஏ க்கு எதிரான இரண்டு 50 ஓவர் போட்டிகளில் 97 ரன்கள் எடுத்தார்.மேலும் இந்தியாவுக்காக ஏற்கனவே நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 68 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ரிஷப் பண்ட். இந்தியாவின் டெஸ்ட் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட். இவர் கடைசியாக 2024 ஆகஸ்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சமீபத்தில் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் நான்காவது டெஸ்ட்டின் போது வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த பிறகு போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்பினார். தென்னாப்பிரிக்கா ஏ க்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணியை வழிநடத்திய பண்ட், நல்ல ஃபார்மை காட்டினார்.
நான்கு இன்னிங்ஸ்களில் 196 ரன்கள் எடுத்தார். இரண்டு அரை சதங்கள் அடங்கும். பண்ட் இப்போது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளார். பண்ட் 31 ஒருநாள் போட்டிகளில், 871 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 33.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 106.21 ஆகும். இதில் ஐந்து அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.
இந்த பட்டியலில் இறுதியாக அசாம் ஆல்-ரவுண்டர் ரியான் பராக் உள்ளார். 24 வயதான இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா ஏ க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஏ க்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா ஏ அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. பராக் பேட்டிங்கில் தனித்து நின்றார்.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா வரட்டும்.. அதுக்காக காத்துகிட்டு இருக்கேன்.. என்னோட பிளான் இதுதான் – சிராஜ் பேச்சு
மூன்று இன்னிங்ஸ்களில் 187 ரன்கள் எடுத்தார். சராசரி 62.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 123.84 அடங்கும். தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் பதிவு செய்தார். பராக் இதுவரை இலங்கைக்கு எதிரான 2024 ஒரு ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். அங்கு 15 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது ஆல்-ரவுண்ட் திறன்கள் மற்றும் சமீபத்திய ஃபார்மை கருத்தில் கொண்டு, ஷ்ரேயஸ் ஐயர் விலகினால் தென்னாப்பிரிக்கா தொடருக்கு தேர்வு செய்யப்படலாம்.