வெறும் 15 ஓவர்.. இங்கிலாந்திடமே பாஸ்பால் ஆடிய இலங்கை அணி.. பிரகாசமான வெற்றி வாய்ப்பு.. மூன்றாவது டெஸ்ட்

0
1127
Srilanka

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தற்போது இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு பதிலடி தந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லும் மிக அதிகபட்ச வாய்ப்புக்கு இலங்கை அணி வந்திருக்கிறது.

இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்துவிட்டது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லும் வாய்ப்புகள் வந்திருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் ஆதிக்கமும் சரிவும்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாளில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 221 ரன்கள் எடுத்து வலிமையாக இருந்தது. இதற்கு அடுத்து இரண்டாவது நாளில் மேற்கொண்டு 325 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு கேப்டன் ஒல்லி போப் அதிகபட்சமாக 154 ரன்கள் எடுத்தார். மிலன் ரத்னாயகே 3 விக்கெட் வீழ்த்தினார்

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷாங்கா 64, கேப்டன் தனஞ்செய டி சில்வா 69, கமிந்து மெண்டிஸ் 64 ரன்கள் எடுக்க, அந்த அணி 263 ரன்கள் எடுத்தது. ஒல்லி ஸ்டோன் மற்றும் ஜோஸ் ஹல் இருவரும் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்ந்த இங்கிலாந்து அணி

இதைத்தொடர்ந்து 62 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு ஜேமி ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 67 ரன்கள் எடுத்தார். லகிரு குமாரா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இலங்கை அணி 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்ததுமே அனுபவ வீரர் திமுத் கருணரத்தினே 8 ரன்களில் வெளியேறினார். ஆனால் அடுத்து இலங்கை அணி இங்கிலாந்துக்கு அவர்களது பாஸ் பால் முறையில் விளையாடிய அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்தது.

இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்திய அணி அறிவிப்பு.. ஸ்டார் வீரர் நீக்கம்.. ஆர்சிபி வீரர் அறிமுகம்.. முக்கிய மாற்றங்கள்

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 44 பந்துகளில் 53 ரன்கள், குசால் மெண்டிஸ் 25 பந்துகளில் 30 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் இரண்டு நாள் மீதம் இருக்க, இலங்கை அணி வெல்வதற்கு கைவசம் 9 விக்கெட்டுகள் மற்றும் 125 ரன்கள் தேவையாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது அவர்களுக்கு பெரிய உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

- Advertisement -