“நான் வெளியே போய் யாரையும் தவறு என்று நிரூபிக்கிற இடத்தில் இல்லை!” – ஆட்டநாயகன் விராட் கோலி உருக்கமான பேச்சு!

0
1824
Viratkohli

கிரிக்கெட் உலகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எடுத்துக் கொண்டால் மூன்று வடிவத்திலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி!

அவருக்கு 2019 இறுதிக்கு பிறகு பேட்டிங்கில் ஒரு பெரிய சரிவு உண்டானது. அவர் தனது கடைசி ஐந்து சதங்களை அடிக்க 100 இன்னிங்ஸ்கள் தாண்டி எடுக்கும் அளவுக்கு போனது.

- Advertisement -

தற்பொழுது நடந்து முடிந்திருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 186 ரன்கள் குவித்து, 1200 நாட்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் இல்லாமல் இருந்து வந்த வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் தனக்கும் நிம்மதியை தந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவிக்க, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் கில் சதம் அடித்து இருந்தாலும், யாராவது ஒருவர் நின்று ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை சமன் செய்யும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்ட விராட் கோலி கடைசி வரை நின்று இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெறும் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் முடிய இந்திய அணி தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை விராட் கோலி பெற்றார்.

ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற விராட் கோலி பேசுகையில் ” உண்மையைச் சொல்வது என்றால் ஒரு வீரராக என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் எனக்கு முக்கியம். நாக்பூர் முதல் இன்னிங்சில் இருந்து நான் நன்றாக பேட்டிங் செய்வதாக உணர்ந்தேன். நீண்ட நேரம் பேட்டிங் செய்வதில் கவனம் செலுத்தினோம். நான் அதை ஓரளவுக்கு செய்தேன். ஆனால் கடந்த காலத்தில் நான் செய்த அளவுக்கு கிடையாது. இதைப் பொறுத்தவரையில் எனக்கு ஏமாற்றம்தான்! என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் எப்படி விளையாட விரும்புகிறேனோ அப்படியே விளையாட முடிகிறது என்பதில் கொஞ்சம் திருப்தி. எனது டிபென்சில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் வெளியே சென்று யாரையும் தவறு என்று நிரூபிக்கும் இடத்தில் இப்பொழுது இல்லை. நான் ஏன் களத்தில் இருக்கிறேன் என்று நியாயப்படுத்த வேண்டும். நான் ஆட்டம் இழக்காமல் 60 ரன்கள் எடுத்திருந்த பொழுது நேர்மறையாக விளையாட முடிவு செய்தோம். ஆனால் நாங்கள் ஸ்ரேயாசை காயத்தால் இழக்கவும் ஒரு பேட்டர் குறைவானது. இதனால் நாங்கள் நேரத்தை அடிப்படையாக வைத்து விளையாட முடிவு செய்தோம். ஆஸ்திரேலியாவும் நன்றாக பந்து வீசினார்கள் மேலும் சில பீல்டிங் செட்களை நன்றாக அமைத்தார்கள். பிறகு நாங்கள் கொஞ்சம் முன்னிலை பெற்று எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிக் கொண்டோம்” என்று கூறியிருக்கிறார்!