“ஐசிசிக்கு வருமானம் வேணும்.. அதுக்கு இந்தியாவுக்கு இதை செய்வாங்க!” – சேவாக் கொடுத்த பரபரப்பான ஒப்புதல் வாக்குமூலம்!

0
633
Sehwag

உலகக் கோப்பை வரலாற்றில் எந்த நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளாமல் பல ஆண்டுகள் கழித்து இந்தியா தனது நாட்டில் முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முதல் முறையாக நடத்துகிறது!

இதன் காரணமாக நடப்பு உலகக் கோப்பை தொடரை மிக வெற்றிகரமாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பும். தொடர் வெற்றிகரமாக அமைந்தால்தான் ஐசிசிக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

- Advertisement -

எனவே இந்திய அணி இறுதிப்போட்டி வரை இந்த தொடரில் இருக்க வேண்டியது முக்கியம். எனவே மொத்தமாக இந்திய அணி விளையாடும் மைதானங்களில், இந்திய அணிக்கு சாதகமான வகையில் ஆடுகளங்கள் தயார் செய்யப்படும். இதற்கு ஐசிஐசியும் ஒத்துழைக்கும் என்று வெளியில் பரவலான பேச்சுகள் இருந்து வந்தது.

கடந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை நடத்திய இங்கிலாந்துக்கு, அதிரடியாகத் தாக்கி விளையாடுவதற்கு அவர்களுக்கு சாதகமாக தட்டையான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து வெளிப்படையாக சேவாக் பேசி உள்ளது பரபரப்பாகியுள்ளது. அவர் கூறும் பொழுது “இந்த விஷயத்தில் ஐசிசி இந்தியாவுக்கு உதவி செய்யும். ஆடுகளங்களை இந்திய மைதான ஊழியர்கள் தயார் செய்வார்கள். இந்தியா அரையிறுதி இல்லை இறுதிப் போட்டியில் விளையாடும் பொழுது, இந்தியாவுக்கு ஏற்ப ஆடுகளங்கள் தயார் செய்யப்படும்.

- Advertisement -

எனவே இதன் காரணமாக எங்களுக்கு உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு மிக அதிகமான வாய்ப்புகள் உண்டு. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை விளையாடினால், பார்வையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்புகள் மூலமாக ஐசிசி நிறைய பயனடையும் என்று அவர்களுக்கு தெரியும்!” என்று மிகப்பெரிய விஷயத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய சென்னை சேப்பாக்கம் மைதானம் ஏற்கனவே மெதுவான ஆடுகளமாகவே பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. நேற்றும் அதே முறையில்தான் இருந்தது. இதன் காரணமாக இந்திய அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடினார்கள்.

அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் தரப்படுகின்ற ஆடுகளம் சுழற் பந்து வீழ்ச்சிக்கு சாதகமாக இருக்குமா? என்று பார்க்க வேண்டும். சிறிய அணிகளுக்கு எதிராக பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம், பெரிய அணிகளுக்கு எதிராக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்கின்ற வகையில் அமையவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது!